பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டுக்காரரைக் கோபித்தல் ஆர்டா ஆரடா ஆட்டுக்காரா அஞ்சாமல் நிற்கின்ற சண்டாளா, கோபம் வருவதைப் பார்க்கலையா, கூக்குரலிட்டதுங் கேட்கலையா? மீசைதுடிக்குது,மேனியிலே வேர்வை யுண்டாவதைப் பார்க்கலையா? கைத்தடி நிற்பதைப் பார்க்கலையா, கண்கள் சிவந்ததைப் LurrrrásåHDurr ? உன்னுயிரே மனுக்காகுமுன்னே உண்மையைச் சொல்லடா, ஆட்டுக்காரா. எட்டயபுரத்து ராஜாவா லேற்பட்டதோ இந்த உத்தரவு? ஆட்டுக்காரர் சொல்வது அய்யாவே, அய்யாவே, வாருமையா, அன்புடனே சொல்லக் கேளுமையா எட்டைய புரத்து ராஜாவாலேற்பட்ட காரிய மொன்று மில்லே. எங்கட்கதிபதி செல்லபொம்மு உங்கட்கதிபதி எட்டேந்திரன், எங்கட் கதிபதி:யுத்தரவாலிங்கே ஆடுகள் மேயுதையா உங்கட்கதிபதி எட்டேந்திர னுத்தரவுப்படி செய்யுமையா எங்கட்கதிபதி செல்ல பொம்முக்கிந்த விபரத்தைச் சொல்லுகிருேம் பெரிய முத்து சொல்லுவது உங்கட்கதிபதி செல்ல பொம்மு உத்தரவுப்படி செய்ததனல் எங்கட்கதிபதி எட்டேந்திர னிடத்திற்கேகுது மாடாடு எட்டையபுரத்து ராஜ சபை ஆரய்யா ஆரய்யா பேஷ்தாரா அங்கங்கே தீர்வை வசூலாச்சா ? தீர்வை வசூலிலே பாக்கியுண்டா, சேர்ந்திடும் பண்ணையிற் . சோலியுண்டா? சம்பளக்காரர்க்குப் பாக்கியுண்டா, சர்க்கார் தீர்வையிற் பாக்கியுண்டா ? இவ்வருட வருமானத்திலே ஏற்பட்டமிச்ச மேதேனுமுண்டா? வழிவழியாகவே வந்த தெய்வம் வையகத்தார்கள் வணங்குங்கந்தன், கந்தனிருப்பது செந்தியிலே காவல் புரிதல் கழுகுமலை. வைகாசி மாசி தை மாசத்திலே வாரவர் போரவர் கோடியுண்டு. பிரார்த்தனைக் காவடிக் காணிக்கையும் பேரிட்ட காணிக்கை கோடியுண்டு. இவ்வித காரியந்தப்பியிருந்தா லெனிடஞ் சொல்லிட or. வேண்டுமையா.