பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 £ கட்டபொம்முதுரை சொல்வது எனக்கு நானே கொடுத்ததல்லா லின்னமொருவர் கொடுப்பதுண்டோ ? சாகீஷ ன் மேஷர் துரை கேட்பது அருங்குளத்திலே கம்பங்கதிரை நூறுகட்டுகளே னெடுத்தாய் ? கட்டபொம் முதுரை சொல்வது காடைக் கிரையில்லை நானெடுத்தேன் கன்னக்களவா வழிப்பறியா? சாகீஷன் மேஷர் துரை சொல்வது எப்போது வென்ருன் காட்டு நாய்க்கன் பட்டி எல்லையில் மேய் மாட்டைப் பத்தலாமா ? கட்டபொம் முதுரை சொல்வது காட்டையுழுதிடத் தானே தேனுங் காரணமில்லாமற் பத்து வேனே ? சாகீஷன் மேஷர்துரை கேட்பது எட்டையபுரம் பண்ணை மாட்டை எதற்குப் பத்தனர், பத்தலாமா ? கட்டபொம்மு துரை சொல்வது பிள்ளைப் பாலுக்காகப் பத்தினதல்லாமற் பேதகஞ் செய்வேனே - கட்ட பொம்மு ? சாகீஷன் மேஷர்துரை கேட்பது எங்கட்களித்திடுங் கப்பங்களை ஏழுவருட மேனளிக்கவில்லை ? கட்டபொம்முதுரை சொல்வது வானம்பொழிய முப்போகம் விளையுது மன்னனென் காணிக்கு ஏது பணம் ? கால மழையிலே முப்போகம் விளையுது கொற்றவன் காணிக்கு - ஏது பணம் ? மாரிகள் பெய்தும் பெய்யாமலும் போவதை மாற்றுதற்கோ கப்பம் வாங்குகிறீர்?