பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿 தந்திரம் யோசிக்கக் கிச்சுக்குடுக்கை 79 போடல்-கோட்டையில் கடோசிவீரம்-மேற்படி சந்தம். தூத்துக்குடி முத்தையாப் பாண்டியனிடம் அந்தப்புரத்தை எல்லாம் அந்தப் புறமாக்கச் சொல்வது துரத்துக்குடி முத்தையா பாண்டியா சுந்தரனே சொல்லக் கேளுமையா அந்தப் புரத்திலுள்ளவரை அருங்கிணற்றினுள் தள்ள வேண்டும் ெ அருங்கிணற்றினிற் றள்ளாவிடில் ஆண்சிறை பெண்சிறைக் காளாவோம் ஆண்சிறை பெண் சிறைக் காளாகாது அவசரமாகச் செய்திடுவோம் உடனே முத்தையா பாண்டியன் சொல்வது-மேற்படி சந்தம் அந்தப்புரத்தினிலுள்ளவரே அன்புடனனென்று சொல்லுகிறேன் உங்களெல்லோரையுங் கொல்லும்படி ஊம்ைத்துரை தந்த உத்தரவு மாறிப்பேசவு மார்க்கமில்லை மாறினலும் விடப்போறதில்லை வையகத் தாசையை வையாமல் வானுலகந்தனில் வாழ்ந்திடுவீர். அந்தப் புரத்தை அழிக்கும்போது பட்டத்தரசி வெள்ளையம்மாளே வெட்டத் துணிந்த உடனே அவளுரைப்பது-மேற்படி சந்தம் துரத்துக்குடி முத்தையா பாண்டியா துஷ்டத்தனஞ் செய்ய வந்தனையா? அண்ணனிறந்திடுஞ் சீமையிலே அடக்கச் சொன்னரோ ஊமைத்துரை கொற்றவனில்லாத சீமையிலே கொல்லத்துணிந்தாரோ ஊமைத்துரை வேந்தனில்லாத சீமையிலே வெட்டெனச் சொன்னரோ ஊமைத்துரை ? 79. grenade என்னும் கையால் வீசும் குண்டு. இது வெடித்தால் மிகுதி யாகப் புகை வரும் 80, கிணற்றில் தள்ளியதாகப் பல பாடல்கள் கூறுகின்றன. எரித்துக் கொன்றதாகச் சில பாடல்கள் கூறும், க-48