பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

“திங்களைப் போற்றுதும், திங்களைப் போற்றுதும்
கொங்கலர்ச் சென்னி குளிர்வெண் குடை போன்றிவ்
அங்கண் உலகளித்த லான்”

என்ற சிலப்பதிகார நூலாலும் அறிந்து கொள்ளலாம்.

“செருமா உகைக்கும் சேரலன் காண்க” என்று கழறிற்றறிவாரைச் சுட்டிக் கூறியதன் நோக்கம் பின்னால் இவர் நம்பி ஆரூரருடன் கைலைக் கேகுங்கால், கலினமாவில் கடிது ஊர்ந்து செல்ல வேண்டி இருக்கும் குறிப்பினை முன்கூட்டி அறிவிக்கும் பொருட்டே ஆகும். இவ்வாறு பின்னர் நிகழ்வதை முன்னரே அறியும் வண்ணம் சில அருந் தொடர்கள் அமைந்து விடுவதை இன் தமிழ் இலக்கிய நூல்களில் இனிதுறக் காணலாம். தயரதன் தன் திருமகனான இராமனைக் கெளசிக முனிவருடன் அனுப்ப விழைந்து, அவனை அழைக்கக் கட்டளையிட்ட பணியாளரிடம் “திருவின் கேள்வன்” என்று குறிப்பிட்டது, பின்னர்ச் சீதையைத் திருமணம் முடித்தலை முன் கூட்டி அறிவிக்கும் மங்கலச் சொல்லாகவன்றோ அமைந்து விட்டது? இங்ஙனம் பின்னால் நிகழ்வதை முன்னால் அறிவிக்கும் சொற்றொடர்களை அமைப்பதற்குக் கம்பர் யாங்ஙனம் உணர்ந்தனர்? அவர் திருமுறைகளை நன்கு பயின்ற பயிற்சியினால் என்று கூறின் அது மிகையாகாதன்றோ ?

செருமா உகைக்கும் சேரலன் காண்க

என்ற தொடர்ப் பொருளைச் செவ்வன் சிந்தித்த தன் பயனன்றோ,

திருவின் கேள்வனேக் கொணர்மின்”

என்று செப்பச் செய்தது?

இங்ஙனம் தம் நாட்டையும், சேரர் பெருமானார் சிறப்பையும் புகழ்ந்து கூறிய இறைவர், தாம்

க-2