பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவளை விரும்பினவன் கொண்டுசென்றதில் தவ றில்லை. அதுகுறித்து மகிழ்வீராக’ என்று கூறினர்.

இக்கருத்தை மாணிக்கவாசகர் கற்றார் ஏத்தும் கலித் தொகையில் இருந்து எடுத்துத் தம் நூலில் ஆண்டுகொண்டனர் என்பது,

‘பலவுறும் நறுஞ்சாந்தம் படுப்பலர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செயும்
நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங் கனையளே,

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செயும்
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங் கனையளே.

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என் செயும்

சூழுங்கால் தும்மகள் நுமக்குமாங் கனையளே.’

என்னும் பாடல்களால் உணரலாம்.

கற்புப் பற்றிய சீரிய கருத்துக் திருக்கோவையாரில் நாகரிகமுறையில் கூறி இருப்பது போற்றப்படுவது போன்று வேறு எந்த நூலிலும், காண்டற்கு இல்லை என்று கூடக் இயம்பிவிடலாம், நாம் கற்பு என்பது பெண்மக்கள் சமூகத்திற்குரிய பண்பு என்று கருதி இருக்கிறோம். அது தவறான எண்ணமாகும். கற்பு என்னும் சொல் ஒழுக்கம் என்னும் பொருளில் ஒளிர்வதனால், அவ்வொழுக்கம் ஆண்மக்கள் இனத்திற்கும் பொருந்துவதாகும். இதனை நம் நூலாசிரியப் பெருந்தகையார், எவ்வளவு நாகரிகமாக மொழிகின்றர் என்பதை உணரும்போது, இவரது நுண்மாண் நுழைபுலம் தெள்ளிதாகத் தெரியவருகிறது.

நற்றாய், தன் மகளைப்பற்றி முக்கோல் பகவரை முன் வினாவியதைப்பார்த்தோம். அவர் அவ்வம்மை யாருக்கு ஏற்றவிடை கூறியதையும் உணர்ந்தோம். என்றாலும், நற்றாய் உள்ளம் அமைதி பெற்றிலது.