பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78


கோசிகர் தாம் செய்யும் வேள்விகட்கு இடையூறாக நின்ற தாடகையைக் கொல்ல இராமனை அழைத்துச் செல்லுகிறார். இராமனோ, எந்த வேட்டையும் ஆடி. அறியாதவன். அரசர் குலச்சிறுவர் முதல் முதல் வேட்டையாடினால், அது கன்னி வேட்டையெனப்படும். ஆகவே, கன்னிவேட்டை, முதல் வேட்டை என்ற பொருளது. ஆனால், இராமனுக்கமைந்த கன்னிவேட்டை, முதல் வேட்டை என்ற பொருளுடன் கன்னியாகிய பெண்ணை வேட்டையாடிக் கொல்லுதல் என்ற பொருள் தரும் முறையிலும் அமைந்துவிட்டது. இது குறித்து, இராமன் தாடகையைக் கொல்வது குறித்துச் சிறிது அஞ்சி னான். அவ்வச்சம் தாடகையைக் கண்டு அஞ்சிய அச்சம் அன்று. ஒருபெண்ணையா ஓர் ஆண் மகன் வேட்டையாடிக் கொல்வது என்பதுதான் அவனது அச்சத்திற்குக் காரணம். இந் நிலையில் விசுவாமித்திரர், இராமனது உட்கிடக்கையை யுணர்ந்து,

தீதென் றுள்ளவை யாவையும் செய்தெமைக்
கோதென் றுண்டிலள் இத்தனை யேகுறை
யாதென் றெண்ணுவ திக்கொடி யாளையும்

மாதென் றெண் ணுவ தோமணிப் பூணினாய்

என்று கூறிக்கொல்லுமாறு கட்டளையிட்டார். அவ் வளவு தான்! உடனே இராமன்.

ஐயன் அங்கது கேட்டறன் அல்லவும்
எய்தி னால்அது செய்கென்று ஏவினால்
மெய்ய நின்னுரை வேத மெனக்கொடு

செய்கை யன்றோ அறம்செயு மாறென்றான்

என்று கூறி அம்பை விடுத்தான். அவ்வம்பு வேகமாகச் சென்று தாடகையின் உடல் உரத்தை உருவி வெளிவந்துற்றது. இந்த நிலையைத்தான் கம்பர்,