கிறித்தவர் தமிழ்த் தொண்டு 105
வலியினல்இ லஞ்சம் கொள் மாந்தர்பால் சென்று
மெலியவர் வழக்கினை விளம்பல் வாடிய
எலிகன்மார்ச் சாலத்தின் இடத்தும் மாக்கள் வெம்
புலி இடத் தும்சாண் புகுதல் ஒக்குமே என்பது அப்பாடல்.
இவர் கீர்த்தனைகளையும் பாடியுள்ளார். அவை சர்வசமய சமரசக் கீர்த்தனைகள். பெண்மதிமாலே என் னும் நூலையும் இயற்றியுள்ளார். இவர்தம் காலத்தில் திருவாவடுதுறை ஆதீன கர்த்தராக இருந்த பூநீலழரீ சுப்பிரமணிய தேசிகரை மனமாரப் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார். இவர் பாடல்கள் சுவை மிக்கனவாக இருக்கும். இவர் தொழில் துறையில் இருந்தபோது பலர் இவரை வங்து பார்ப்பது வழக்கம். ஆனால், அடுத்து இவர் தொழில் துறையிலிருந்து ஓய்வு பெற்ற போது ஒருவரும் வங்து கண்டிலர். இதனேச் சுவைபட,
அழையாமல் முன்வரு வோர்.இப்
பொழுதிங் கழைத்தும் வரார் கழையாம் என இன்சொல் கூறி
யவர்.வன்சொல் கற்றுக்கொண்டார் பழையார் நமைஅறி யார்ஆயி
ர்ை.இப் படிஉறகம் பிழையா தெனில் உத்தி யோகத்தைக்
கைவிட்ட பேரிழவே
என்று பாடி இருப்பதனால் அறியலாம்.
காட்டில் மழை பெய்யாத போது மேகத்தை நோக்கிப் பத்துச் செய்யுட்களைப் பாடியுள்ளார். அவற்
லுள் ஒன்று,