பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கட்டுரைக் கொத்து

காரியம் முடிதற்கான முறையில் பேசி நடங்துகொள் ளல்வேண்டும். இவற்ருேடு தம் முறைமையையும் காலத்தையும் இடத்தையும் அறிதல் தூதுவர்க்குத் தலைசிறந்த பண்பாகும். தம்மவர் நிலையினையும், எதிரி களின் கிலேயினேயும் அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செயல் முறைகளைச் செய்தல் வேண்டும்.

தூதுவர்க்கு உள்ளத்துாய்மை வேண்டற்பாலது. பொருள் வெஃகலும் இன்பம் விழைதலும் கூடா. துணிவுடைமை வேண்டப்படுவது. துணிவுடைமையா வது திடபுத்தியாம். அதாவது, தம்மை அனுப்பி, இன் னவை கூறி வா என்று கூறி விடுத்தபோது, தமக்கு ஏதேனும் தீங்கு வருமே என்று கருதி அஞ்சித் தம் தலே வர்க்குத் தாழ்வு வரும் வார்த்தைகளே வாய் சோர்ந்தும் சொல்லாத பண்பாடு, தூதுவர்க்கு இன்றியமையாத தாகும். மறந்தும் வடுச்சொற்களே வழங்குதல் கூடாது.

தடுமாற்றம் இன்றித் தகைசான்ற சொல்லால் வடுமாற்றம் வாய்சோரான் ஆகி-விடுமாற்றம் எஞ்சாது கூறி இகல்வேந்தன் சீறுங்கால் அஞ்சாது அமைவது தாது”

என்று பாரத வெண்பா வற்புறுத்துவதைக் காண்க.

மேலும். இவர்கள் பண்பை ஏலாதி,

"மாண்டமைந்தார் ஆய்ந்த மதிவனப்பே வன்கண்மை ஆண்டமைந்த கல்வியே சொல்ஆற்றல்-பூண்டமைந்த

காலம் அறிதல் கருதுங்கால் தூதுவர்க்கு ஞாலம் அறிந்த புகழ்'

என்று கூறுகிறது.