பக்கம்:கட்டுரை வளம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118 கட்டுரை வளம்

விசயரோடு நடத்திய வடநாட்டுப் போர் பதினெட்டு நாழிகையும் நடந்து முடிந்ததாக இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.

“செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக உயிர்த்தொகை உண்ப வொன்பதிற் றிரட்டியென்று யாண்டும் மதியம் நாளும் கடிகையும் ஈண்டுநீர் ஞாலங் கூட்டி யெண்கொள’

- சிலம்பு, நீர்படைக்காதை: 7-10

எனவே, இராமாயணம் எனும் இலக்கியம் கண்ட போர்க்களம், நல்ல பல கருத்துகளை நம் முன்னே குறிப்பிடுகின்றது என்பது நன்கு விளங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/120&oldid=1379524" இலிருந்து மீள்விக்கப்பட்டது