பக்கம்:கட்டுரை வளம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிள்ளைத் தமிழ் 133

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத் தமிழில் தம் பாட்டுடைத் தலைவராகிய சேக்கிழாரைப் பத்திச் சுவைநனிசொட்டச் சொட்ட பாடிய கவிவலவ! என்று பாராட்டிப் பாடி யுள்ளார். ‘மணக்கும் மணக்கும்’ என்ற சொல்லைப் பல முறை ஒரு பாட்டில் கையாண்டு அவர் பாடியுள்ள பாட்டின் சொல்லாழமும், கருத்தாழமும், கற்று மகிழ்ந்து இன்புறத் தக்கனவாகும்.

இத்தகைய சிறப்புவாய்ந்த பிள்ளைத்தமிழ் நூல்களுட் சில அச்சேறியுள்ளன; சில அச்சில் வாராமல், ஏட்டு அளவிலேயே நின்று விட்டன

பிள்ளைத்தமிழ் நூல்களைப் படிப்போர், அந்நூல் களின் சொற்சுவை, பொருட்சுவை, கருத்தாழம், சந்தநயம் வளமான கற்பனை, உவமம் முதலிய அலங்காரங்களில் தம் நெஞ்சத்தைப் பறிகொடுப்பர் என்பது உறுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/135&oldid=1382155" இலிருந்து மீள்விக்கப்பட்டது