138 கட்டுரை வளம்
‘காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்,
நோக்குங் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்! “
-தெய்வப் பாடல்கள், ஐய பேரிகை : 2
இது போன்று இந்திய நாட்டினர் அனைவரும் ஒருமைப்பாட்டு உணர்வோடு ஒன்றிய சிந்தையினராய் வாழ வேண்டும் என்பதனைப் பெரிதும் வற்புறுத்துகிறார் பாரதியார். எங்கள் தாய்’ என்ற கவிதையில்,
‘முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள்-இவள்
செப்பு மொழி பதினெட்டுடை யாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்”
-தேசிய கீதங்கள், எங்கள் தாய் : 3
என்று குறிப்பிட்டுள்ளார். ‘வாழ்ந்தால் முப்பது கோடி மக்களும் ஒரு நிறையாய் வாழ வேண்டும்; இன்றேல், ஒருங்கே மடிய வேண்டும்!” என்று ஆவேசத்தோடு பேசு கிறார் பாரதியார் :
“எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்;
முப்பது கோடியும் வாழ்வோம்-விழில்
முப்பதுகோடி முழுமையும் வீழ்வோம் !”
-தேசிய கீதங்கள் பாரத நாடு : 5
வடகோடி மக்களும் தென்கோடி மக்களும் இணைந்து
மகிழ்ந்து வாழ வேண்டும் என்பதனை அழகியதொரு கற் பனைக் காட்சியாய்க் கவினுற வடித்துக் காட்டுன்றார்,