இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழ் இசையின் தொன்மையும் வளர்ச்சியும் 83
தமிழிசை இயக்கம் தொடக்கக் காலத்தில் தனக் கேற்பட்ட இன்னல்களையும் இடையூறுகளையும் கடந்து வெற்றி கண்டது. இப்பொழுது சென்னையில் இராஜா அண்ணமலை மன்றம் அமைக்கப்பட்டு, டிசம்பர்த் திங்கள் இறுதியில் தமிழிசை விழாவும் பழம்பண்களை ஆராயும் பண் ஆராய்ச்சி மாநாடும் நடைபெற்று வருகின்றன. இன்று செட்டி நாட்டு அரசர் டாக்டர் ராஜா சர் முத்தைய செட்டியார் அவர்களும், அவர்தம் இளவல் திரு. மு. அ. சிதம்பரம் செட்டியார் அவர்களும், தந்தையார் விட்டுச் சென்ற பணியினை-தமிழிசை வளர்ச்சியினைக் கண்னும் கருத்துமாய்க் காத்து வருகின்றனர். தமிழிசை நாளும் வளர்வதாக!