பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கண்டறியாதன கண்டேன்

வைத்துக் காட்டினர்கள். ஆழ்வார்களும் நாயன்மார்களும் நாயக நாயகிபாவத்தில் பல பாடல்களைப் பாடினர்கள். இறைவனே நாயகனக வைத்துத் தம்மை நாயகியாகக் கொண்டு பலபல பாடல்களைப் பாடியிருக்கிருர்கள். இந்த வகையில் அறம், இன்பம் என்ற இரண்டு துறைகளிலும் நூல்கள் கிரம்ப வந்தன. வீட்டைப்பற்றியும் பல அருளா ளாகள பாடினாகள.

இவ்வாறு மற்றவற்றை விரித்து விரித்துப் பாடினர்கள் என்பதைப் பார்க்கிருேம். ஆனல் பிற்காலத்தில் பொருள் நூலை என் படைக்க மறந்தார்கள்? பழங்காலத்தில் பொருளேத் திருவள்ளுவர் சொன்னர்; நம் காலத்தில் பாரதி எடுத்துச் சொன்னர். ஆனல் இடைக்காலத்தில் அதைப்பற்றிச் சொல்வதையே மற்ந்து போனர்கள். ஆட்சி கம் ஆட்சியாக இருக்கும்போது பொருளைப்பற்றிய நூல்களே இயற்ற வேண்டும்.

விடுதலைப் போர்கள் பல நாடுகளில் நடந்திருக்கின்றன. அத்தகைய போராட்டங்களைப் பற்றி அந்த அந்த காட்டுப் புலவர்கள் இலக்கியங்களைப் படைத்திருக்கிருர்கள். பிரெஞ்சு மொழியில் விடுதலைப் போரைப் பற்றிய இலக்கி யங்கள் இருக்கின்றன. ரஷ்ய மொழியில் எழுந்தன. நாம் 150 ஆண்டுகளாக அடிமையாக இருந்து, பிறகு விடுதலைப் போரை நடத்தினேம். உலகத்தில் பிற நாடுகளில் நடந்த புரட்சிக்கும் இந்தியப் புரட்சிக்கும் வேறுபாடு உண்டு. அவர் கள்மறைவாகப் புரட்சி செய்தார்கள். இந்தியாவில் வெளிப் படையாகப் புரட்சி செய்தார்கள் அமைதியும் அறமும் குலேயாமல் புரட்சி நடந்தது; கத்தியின்றி ரத்தமின்றி அற்புதப் போராட்டம் கடந்தது. அதைப்பற்றி எவ்வளவோ இலக்கியங்களைப் படைக்க இடம் இருக்கிறது. அந்தப் புரட்சியைப் பற்றித் தமிழில் எழுத வேண்டும். இந்த அறையில் பிறக்கும் உணர்ச்சி இத்துடன் கின்றுவிடாமல் அம்பலத்தில் வந்து பரவ வேண்டும்.