பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 கண்டறியாதன கண்டேன்

வற்றை அவருக்கு வழங்குவார்கள். ஆர்ச்பிஷப், அரசருக்கு, முடியைப் புனையும்போது சிறிய முடிகளே அணியும் உரிமை உடையவர்கள் அவற்றை அணிந்துகொள்வார்கள். ஊது குழல் முழங்கும்; மணிகள் ஒலிக்கும். பீரங்கிகளே வெடித்து இந்த நல்ல நிகழ்ச்சியைப்பற்றி லண்டன் மாநகர் முழுவதும் அறிந்துகொள்ளச் செய்வார்கள்.

இப்படிப் பல வகையில் வரலாற்ருேடு தொடர்புடைய, தாக விளங்குவது இந்த வெஸ்ட்மின்ஸ்டர் அப்பே. .

எந்த இடத்தைப் பற்றியும் தெளிவாக அதன் வரலாறு தெரியும்படி புத்தகங்களே வெளியிட்டிருக்கிரு.ர்கள். லண்டன் மாநகரில் எத்தனையோ பழைய கட்டடங்கள், கிறுவனங்கள் காலங்காலமாக இருந்து வருகின்றன. அவற்றை அவர்கள் நன்ருகப் பாதுகாத்து வருவது மட்டும். அன்று: அவற்றின் பெருமையை உலகமே அறியும்படி செய்கிருர்கள்: படங்கள், விளக்கங்கள், புத்தகங்கள். குறிப்புக்கள் வெளியிட்டிருக்கிருர்கள். -