பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் நாள் விழா 81

தமிழ் நாட்டில் யுனெஸ்கோக் குழு ஒன்று இருக்கிறது. யுனெஸ்கோவில் கூரியர் என்ற மாத இதழை ஆங்கிலத்தில் வெளியிடுகிரு.ர்கள். வெவ்வேறு மொழிகளிலும் அதைப் பதிப்பிக்கிருர்கள். தமிழிலும் உண்டு. தமிழ்க் கூரியர் மாதந்தோறும் தவருமல் வருகிறது. ஹிந்தியிலும் ஒன்று வருகிறது. ஆனால் அது காலத்தில் வெளிவருகிறதில்லை. சென்னையில் உள்ள தென்னிந்தியப் புத்தக டிரஸ்டுக்கு இந்த நிறுவனம் கிதியுதவி செய்திருக்கிறது. தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிடும் குழந்தைகளின் கலைக் களஞ்சியத்துக்கு வேண்டிய காகிதத்தை இந்தச் சபை தருகிறது. சீரங்கம் கோயில், இராமேசுவரம் கோயில் ஆகிய இரண்டையும் பாதுகாத்து, நல்ல முறையில் திகழச் செய்யும் திட்டம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறது. அடுத்தபடி காஞ்சிபுரம் கோவிலையும் கவனிக்கும் வாய்ப்பு உண்டு.-இந்தச் செய்திகளையெல்லாம் திரு மால்கம் ஆதிசேவுையா தம் உரையில் கூறி எங்களே வரவேற்று அன்பு காட்டினர்.

முதல் நாள் விழாவின் முடிவில் உண்ட விருந்து கண்ணே அயர்த்த என் அறைக்கு விரைவில் வந்து துயில் கொள்ளலானேன். х

கண்டறி-6