பக்கம்:கண்ணடக்கம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 66 வேணியின் காதலன் 'சார்ஜண்ட் உத்திரவில்லாமல், உன்னை விடுவதா?- முடியாதம்மா முடியாது 66 !" 'சார்ஜண்ட்-அவர் யாரம்மா? எனக்கு உத்திரவிட! எனக்கு உத்திரவிட வேண்டிய உத்தமர் ஊமையாகக் கிடக் கிறார் தாயே! வேண்டுமானால் எனக்கு கொஞ்சம் விஷத் தைக் கொடுத்துவிடுங்கள் - அந்த விரியன் பாம்பிடம் என்னை ஒப்புவிக்காதீர்கள்." 66 “ நன்றாயிருக்கிறது நியாயம். உன்னை நம்பியிருக்கிற ஒருவரை இப்படியா ஏமாற்றுவது? உன் உடம்பு சுகமாக வேண்டுமென்று குண்டப்பன் எவ்வளவு கஷ்டப்படுகிறார்?" 6 . “ஆமாம்-என் உடம்புதான் அவனுக்குத் தேவை. அதற்காக கஷ்டப்படுகிறான். கனி, அழுகிவிடாமல் காப் பாற்றுகிறார்களே, ஏன்? அதன்மேல் உள்ள கருணையாலா? இல்லை-அதை சுவைத்துத் தின்ன வேண்டுமென்ற காரணத் தால்! அந்த வகையைச் சேர்ந்தவனம்மா இந்த வஞ்சகன்!” 6 “ஏன் அவர் மீது சீறிவிழுகிறாய்? நீ அவருக்கு வைப் பாட்டிதானே!'-கேட்டாள் சூர்யா. 66 'அய்யோ! சொல்லாதீர்களம்மா! அப்படி இன்னொரு முறை சொல்லாதீர்கள், கேளுங்கள் தாயே என் கேலிக் கதையை! புண்ணாகிப்போன உடல்களை கண்ணாகக் காத்து வரும் புனிதவதியே, வெறியனின் கோர விளையாட்டால் கந்தல் கந்தலாக பிய்த்தெறியப்பட்ட என் வாழ்க்கைச் சரிதத்தைக் கேளுங்கள். பட்டாளத்திலே ஒரு சிப்பாய் . ° . அவர்தான் என் பாசத்திற்குரிய கணவன். அவரைப் படாத பாடு படுத்தி என்னையும் பஞ்சணைக்கு இழுக்கிறான் பாவி- குண்டப்பன். அவர் சிப்பாய்தான்-ஆனால் காருண்ய சீலர் தாயே! என் மூச்சிலே கலந்துவிட்ட ஜீவன் அவர். என் கண் எதிரிலேயே அந்தத் தடியன் அவரைத் தாக்கினான். எனக்கு தலை சுற்றியது. கந்தா, கந்தா என்று கதறிக் கொண்டு தரையில் விழுந்துவிட்டேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். விழித்துப் பார்த்தபோது நான் ஆஸ்பத்திரியில் இருக்கிறேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணடக்கம்.pdf/27&oldid=1696725" இலிருந்து மீள்விக்கப்பட்டது