பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

窥荔露 கண்ணன் பாட்டுத்திறன் மக்கட்பேறு என்பது ஒரு தாய்க்கு-தந்தைக்கும் கூடத் தான்-ஒரு மாபெரும் பேது அல்லவா? குழந்தையைப் யேற்ற தாய் கொள்ளை இன்பம் அடைகின்றாள். பின்னைக் கனியமுதே - கண்ணம்மா பேகம் பொற்சித்திரமே! அன்னி கணைத்திடவே-ான்முன்னே ஆடிவருத் தேனே! அன்த அடிகளில் அவள் பெறும் இன்பம் பளிச்சிடுகின்றது. ஆழ்வாகுக்கு ஆண்டவன் தேனும் பாலும் கன்னலும் அமுதுமாய்த் தித்தித்து இனிப்பதுபோல் தாய்க்குக் குழந்தை. அமுதம் கலந்த பழத்தின் இனிமைபோல் இனிக் கின்றது. தனித்தனிமுக் கனியிழிந்து வடித்தொன்றாக் கூட்டி சர்க்க ைபு: கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே தனிக் த் தேன்பெய்து பசும்பாலும் தெங்கின் தனிப்பாதுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி இனித்தநறு தெய்அனைத்தே இளஞ்சூட்டின் இறக்கி எடுத்தகவைக் கட்டியிலும் இனித்திடுந்தெள் அமுதே அணித்தமதத் திருப்போதுவில் விளங்கு நடத்தரசு? என்று வள்ளலார் நடராசரிடம் பெறும் இன்பத்தைப் போல் தாய் குழந்தையினால் இன்பம் பெறுகின்றாள். இக்குழந்தை பேசும் பொற்சித்திரமாகவும் அமைந்து விடுகின்றது. இந்த இனிய தோற்றத்தை அளிக்கும் குழந்தையை-ஓடிவரும் தேனை-அள்ளி அணைத்திட எண்ணுகின்றான். இங்கனம் அணைத்திடும் போதுபெறும் அந்த ஊற்றின்பம்-தேனை உண்டதுபோன்ற மகிழ்ச்சியைத் தருகின்றது அவளுக்கு. மக்கள் மெய் -l:്ഞ്ജാബ്s: பாகை (410 }ே