பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

魏 அன்னன் பாட்டுத்திறன் னுடனும் நிகழ்த்தியனவாக அம் மக்கள் வழங்கிவந்த வரலாறுகள் பலவாகும். இவற்றுள் பல வடநூல் வழக்குப் பெற்றவை; எனினும் தமிழகத்திற்கே உரிய சில வரலாறு களும் உள்ளன; இவற்றிற்குப் பாரதம், பாகவதம் முதலிய புராண இதிகாசங்களில் ஆதாரம் காண்டல் அரிது. இதனால் கண்ணன் வழியினராய்த் தென் னாட்டில் குடியேறிய வேளிரும் அப்பிரான் வளர்ந்த ஆயர்பாடியராய் (கோகுலத்தவராய்) இங்கு வந்தேறிய ஆயரும் போன்ற பழந்தமிழ்க் குடிகளால் அவ் வரலாற்று வழக்குகள் இங்கும் வழங்கி நடைபெறலாயின என்று கொள்ளத் தட்டில்லை. இவ் வரலாறுகளில் சிறப்புடை யவை நப்பின்னைப் பிராட்டித் திருமணம், கண்ணன் குருந்தொசித்தது. குடக்கூத்தாடியது, ததிபாண்டனுக்கு வீடளித்தது முதலியனவாகும். இச் செய்திகள் சங்க இலக் கியங்கள், சிலப்பதிகாரம்,மணிமேகலை, சீவக சிந்தாமணி, பழமொழி, ஆழ்வார் அருளிச் செயல்கள், பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் அஷ்டப் பிரபந்தம் முதலிய நூல்களில் காணப்பெறுகின்றன. இத்தகைய வழக்கு களால் தமிழகத்தில் கண்ணனைப்பற்றிய வரலாறு தொன்றுதொட்டே வழிவழியாக இருந்துவருவதைத் தெளியலாம். இதனால்தான் பாரதியாரும் கண்ணனைப் பற்றி விரிவாகப் பாடியுள்ளார் என்று கருதவும் இடம் ஏற்படுகின்றது. .