慧器酸 கண்ணன் பாட்டுத்திறன் பேயும் பிசாசும் திருடரு மென்றன் பெயரினை கேட்டளவில் வாயும் கையுங்கட்டி அஞ்சி நடக்க வழிசெய்ய வேண்டுமையே! தொல்லைதீரும்-வழிசெய்ய வேண்டுமையே! என்று பாடலை நிறைவு செய்கின்றார். இப்பாடலில் ஆண்டான்-அடிமை (சேஷ-சேஷி பாவம்) என்ற வைணவ சமயக்கருத்து பொதிந்துகிடப்பதைக் கண்டு மகிழலாம். தவிர, இப்பாடலில் தொண்டு செயும் solo soupnosir" (Dignity of Labour) Guðjóniouslö (; solo பிட்டிருப்பதையும் தெரிந்து தெளியலாம். இந்தப்பாடலின் தலைப்பில் 'ரசங்கள்: அற்புதம், கருணை' என்ற பாரதியாரின் குறிப்பு உள்ளது. அற்புத ரசத்தை ஏற்கெனவே விளக்கியுள்ளோம்.8 கருணை' ரசத்தை ஈண்டு விளக்குவோம். இதைக் கருணம்’ என்று சொல்வதுதான் சரி. ஒர் எடுத்துக்காட்டுமூலம் இந்த ரசத்தைப் புலப்படுத்துவோம். நடுக்காட்டில் அலைந்து களைப்புற்று மரத்தடியில் படுத்துக் கண்ணயர்ந்து விடுகின் றாள் பட்டத்து அரசி ஒருத்தி. தன் கணவன் போரில் மாண்டுவிட்டதால் பகைவன் நாட்டைப் பிடித்துக் கொள்ளவே அவளுக்கு இந்த அவல நிலை ஏற்படுகின்றது. தன்னை மறந்து அவள் கண்ணயர்ந்தபொழுது தன்னுடைய காதலனோடு அரண்மனையில் இருக்கும் நினைவு வந்துவிடுகின்றது. கனவு காணத் தொடங்கு கின்றாள். பலநாட்கள் அயலூர் சென்றிருந்த தன் கணவன் வந்திருப்பதாகவும். உடனே புறப்பட்டு மறுபடி, யும் போவதாகவும் கனவில் அவள் காண்கின்றாள். இயல் - 6. இந்நூல் பக்கம் (68-69)
பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/201
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை