பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னனைப்பற்றிய தனிப்பாடல்கள் 露盟廖 சித்தினை அசித்துடன் இணைத்தாய்-அங்கு சேரும் ஐம்பூதத்து வியன் உலகு அமைத்தாய் அத்தனை உலகமும் வண்ணக் களஞ்சியம் ஆகப் பலப்பலதல் அழகுகள் அமைத்தாய் இதில் சித்து, அசித்து, ஈசுவரன் என்ற மூன்று விசிட்டாத் வைத தத்துவங்கள் இயைந்து நிற்கும் அதிசயம் நம் கருத்தினைக் கவர்கின்றது. சித்து என்பது, அறிவுள்ள ஆன்மா. அசித்து என்பது, உயிரற்ற சடப்பொருள்; உடலும் இதனுடன் சேரும். சித்தாகிய உயிரை அசித்தாய உடம்புடன் இணையச்செய்து அந்த உயிரை இயக்கும் இறைவனின் செயலையும், அந்த உயிர்கள் அசித்தினைக் கொண்டு கைபுனைந்தியற்றி எத்தனையோ கோலங்கள் புனைந்து தமக்கு வேண்டிய விதவிதமான வசதிகளை யெல்லாம் அமைத்து இந்த உலகினைக் கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனுக்கும் ஏற்ற வண்ணக் களஞ்சியமாக ஆக்கிக்கொள்ளும் அற்புதத்திறத் தினையும் வியந்து போற்றுகின்றோம். எம்பெருமான் தலைமைப் பொறியாளராக நின்று எத்தனையோ பொறி யாளர்களையும் எண்ணற்ற தொழிலாளர்களையும் கொண்டு எத்தனையோ நீர்த்தேக்க அணைகளைக் கட்டி யுள்ளதையும், அங்ங்ணம் சேமித்த நீரைக்கொண்டு எண்ணற்ற உழவர்களால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளமாக்கிய செயல்களையும் நாம் எண்ணி எண்ணி இறும்பூதெய்துகின்றோம். அடுத்து வரும்,