பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டிலமைந்துள்ள படிமங்கள் 認愛ぎ • # என்ற பகுதிகளைப் படிக்கும்ப்ோதே சந்தனம், அத்தர், சவ்வாது, மணம் கூடு தைலம்-இவை நாற்றப்புல உருக்காட்சிகளை எழுப்புகின்றனவன்றோ? கொப்புல உருக்காட்சிகள் : இவ்வகை உருக்காட்சிகளும் காட்டில் ஆதிகமாகத் தென்படவில்லை. எனினும் ஒன்றிரண்டைக் காட்டுவேன். கண்ணன்-என் தோழன்' என்ற பாட்டில் வரும் தன்மைக் குணமுடையான் (8), "தழலின் குணமுடையான் (8), அழவினும் கொடியான்’ (9) என்ற தொடரிகளிலும்; "கண்ணன்-என் சீடன்’ என்ற பாட்டில் வரும், சினத்தி யாகிநான் "ஏதடா, சொன்னசொல் அழித்துரைக்கின்றாய்; பித்தைெ ன் துன்னை உலகினர் சொல்வது பிழையிலை போலும் என்றேன்; வெடுக்கெனச் சினத்தி வெள்ளமாய்ப் பாய்ந்திடக் கண்சிவந் திதழ்கள் துடித்திடக் கனன்று நான் என்ற தொடர்களிலும் நொப்புல உருக்காட்சிகளை (வெம்மை) உணரமுடிகின்றது. 'கண்ணன்-என் காதலன்-(1) என்ற பாடலில் வரும், எண்ணும் பொழுதிலெல்லாம்-அவன்கை இட்ட விடத்தினி லே தண்ணென் றிருந்த தடி!-புதிதோர் சாந்தி பிறந்த தடி! என்ற பகுதியில் நொப்புல உருக்காட்சி (தண்மை) தட்டுப் படுகின்றது. கண்ணன்-என் காதலி-(5) என்ற 2ாட்டில் வரும், மேனி கொதிக்கு தடி!-தலைசுற்றியே வேதனை செய்கு தடி! 5. Lifrş-15