பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரசத்தைப் பற்றி ஒரு சிறு விளக்கம் #3 களைச் சரிவரத் தெரிந்துகொள்ளவேண்டுமாயின், ரஸ்க் பற்றி வடமொழி இலக்கண நூலாரின் கருத்துகளை ஒரளவு அறிந்துகொள்ளவேண்டும். எனவே, இவ்விலக் கணப்படி சுவைகளின் இயல்பையும் அவை உண்டாகும் முறையினையும் விளக்குவேன். மக்கள் உள்ளத்தில் ஒவ்வொருகால் எழும் உளவேறு பாடு பாவம் எனப்படும். பாவங்களுள் சில நிலைபெற் றிருக்கும். பல சிறிது நேரம் நின்று மறையும். தனக்கு ஒற்றுமையுடையனவும் வேற்றுமையுடையனவுமான பிற பாவங்களால் கேடுறாமல் ரஸ்மாகிச் சமையும் அளவும் நிலை நிற்கும் பாவம் ஸ்தாயி பாவம் (நிலையான பாவம்) எனப்படும். அது காதல், சோகம் முதலாக ஒன்பது வகைப்படும். அதனைப் பின்னர் விளக்குவேன், உலகிய வில் உண்டாகும் காதல் முதலியவற்றிற்குக் காரணமாயும் காரியமாயும் துணைக்காரணமாயும் இரு ப் ைவ கவிஞனின் வாக்கிலும் நடிகனின் அபிநயத்தினும் ஆறிவிக் கப்படும்போது, முறையே விபாவம் (நன்கு தோன்றக் செய்வது) என்றும், அனுபாவம் (விபாவத்துடன் இயைத் துள்ளது) என்றும், சஞ்சாரி பாவம் (துணை செய்யும் 3. ஒற்றுமையுடைய பாவத்தால் கேடுறாமல் நிலைபெறு தலாவது ; ஒர் அழகிய மாதினைக் கண்டு அவளிடம் காதல் கொண்டானொருவன். பின்னர் அவளைவிட அழகினை யுடைய வேறொரு மாதினைக் காணும்போது பின்னவள் பால் காதல் செலுத்தாமல், முன்னைய மாதின் நினைவுண் டாகி, அவள்பால் காதல் கொள்வது. வேற்றுமையுடைய பாவத்தால் கேடுறாமல் நிலைபெறுதலாவது: ஒரு மகள்பால் காதலித்தான் ஒருவன் பின்னர் இளமகள் ஒருத்தியின் சாவு, பிரிவு முதலியவற்றைக் கண்டவிடத்தும் காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா என்றவாறு அவற் றால் சோகமும் வெறுப்பும் உண்டாகி முன் காதலிக்கப் பெற்றவளிடத்து முன்னைய காதல் கெடாதிருப்பது.