பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஸ்த்தைப்பற்றி ஒரு சிறு விளக்கம் ፵፰ இளிவரல் முதலிய மாறுபட்ட உளவேறுபாடுகளும் அனுகூல பாவங்களாக அமைகின்றன. அதனாலே, கருணம் (சோகத்தால் உண்டாவது பீபத்லம் (இழிவர லால் உண்டாவது முதலிய ரஸங்களிலும் நமக்குச் சுவை யும் ஈடுபாடும் உண்டாகின்றன. மகாகவி நீலகண்ட தீட்சிதர் 'திர்வேதம் (விரக்தி), பயம், சோகம், ஜுகுப்ஸ்ை (அருவருப்பு) முதலியவைகளும் இலக்கியங்களில் ரஸ்த் தன்மையன ஆகின்றன” என்று கூறியிருப்பது ஈண்டு அறியத்தக்கது. நல்லறிவாளன் தன் தூய உள்ளத்தில் இந்த விபாவம் முதலியவைகளை மீட்டும் மீட்டும் நினைக்கும் செயலுக் குச் சுவைத்தல் (சர்வனம்) என்று பெயர். இவ்வாறு சுவைக்கும் நிலையில் கரும்பின் துண்டிலிருந்து இனிப்புச் சுவை உண்டாதல் போன்று விபாவம் முதலியவற்றிலிருந்து சிருங்காரம் முதலிய ரஸங்கள் தோன்றுகின்றன. காதல் மு. த வி ய உளவேறுபாடுகள் நல்லறிவாளருள்ளத்தில் ஆதிகாலம் முதலே வாஸ்னா ரூபமாய் படிந்துள்ளன. அவற்றை விபாவம் முதலியன எழுப்பிவிடுகின்றன. என் போலவோ எனின், பொருள்களில் அமைந்து கிடக்கின்ற நிலையியல் மின்சாரத்தை (Statical electricity) தேய்த் தல் வெளிப்படுத்துவது போல என்று கூறலாம். இவ் விபாவம் முதலியவை ஒருங்கு சேர்ந்து உண்டான சிறப் பியல் செயலால் பூர்வ வாலனைக்கு எழுச்சி வருவதனோடு உள்ளம் இராஜஸ், தாமஸ் குணங்கள் அகலப்பெற்று, சுத்த சத்துவமாய்ச் சமைகின்றது. ஆன்மா அஞ்ஞானத் திரை யினின்று நீங்கிச் சித்பிரகாச ஆனந்த ரூபமாய் விளங்கு கின்றது. இத்தகைய சத்துவ நிலை அடைந்த உள்ளத் திற்கு இத்தகைய ஆத்தும் காட்சியாய்ப் பொருளாகின்ற அநாதி வாஸ்னா ரூபமாகிய காதல் முதலிய பாவமே ரஸம் என்று அறுதியிடப் பெற்றுள்ளது.