பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霹 கண்ணன் பாட்டுத்திறன் எலப்பாகுபாடு : நம்முடைய பேச்சும் எழுத்தும் உணர்ச்சியுடன் நின்று விடுகின்றன. ஆகவே, ரஸத்தைப் பாகுபாடு செய்வது இயலாததாகின்றது. சுவை நிறைந்த மாம்பழத்தைத் தின் ஒருவன் அதன் சுவையைப்பற்றிப் பலவாறு வருணிக்கலாம். ஆனால் அதன் சுவையை அவன் பிறரால், உணரும்படி செய்தல் இயலாது. பிறரும் ஆம் மாம்பழத்தைத் தின்று சுவைத்தாலன்றி, அதன் கவையை உணரமுடியாது. ரஸ்மும் அந்த வகையைச் சார்ந்ததாகவே கொள்ளவேண்டும். ரஸம் ஒருவருடைய ஆதுபவம். அதைப் பிறருக்கு எடுத்துக் கூற எவராலும் இயலாது. எனவே, சுவை இலக்கண நூலார் ரஸ்நிலையை வைத்துக்கொண்டு அதனை வகுத்துக்காட்ட முற்படாமல் ரளத்திற்கு முன்னிலையாகின்ற உணர்ச்சிகளை வைத்து ரஸங்களையும் பாகுபாடு செய்தனர். நம் மனத்தில் தோன்றக்கூடிய எண்ணற்ற உணர்ச்சிகளை ஒன்பதாகப் பிரித்துள்ளனர்; அனைத்தும் இந்த ஒன்பது பிரிவுக் குள்ளேயே அடங்கும் என்பது அவர்கள் கருத்தாகும். இந்த ஒன்பதிற்குப் புறம்பான மனநிலையே இல்லை என்பது அவர்கள் துணிவு. உலகப்பொருள்கள் எந்தவித மான மனோபாவங்களை எழுப்பினாலும் அவற்றை இந்த ஒன்பதுக்குள் ஒன்றாகவே பாகுபாடு செய்துவிடலாம். இந்த ஒன்பது கவைகட்கும் அவர்கள் தனித்தனியே பெயரிட்டுள்னனர். அவை: வடமொழி தமிழ் #. சிருங்கார்ம் క్షీ ! శj} 2. கருணம் அழுகை 3. வீரம் பெருமிதம் 4. ரெளத்திரம் வெகுளி 5. ஹாஸ்யம் நகை 5. கயானகம் ஆச்சம்