பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爱姆 கண்ணன் பாட்டுத்திறன் நிகழ்ந்த நிகழ்ச்சி சிறந்ததோர் எடுத்துக் காட்டாகும். அப்பொழுதுதான் இராமாயணத்தின் மூல சுலோகமும் பிறந்ததாக வரலாறு. அந்த வரலாறு இதுதான்; மிதுனங் களான கிரவுஞ்சப்பறவைகளுள் பெண் பறவையின் பிரிவு தனக்கு உண்டாகுமோ என்று எப்பொழுதும் அஞ்சும் இயல்புடைய ஆண் பறவையை வேடன் அம்பினால் அடித்துக் கீழே தள்ளிவிட்டான். அது குருதியில் தோய்ந்து மண்ணில் பரிதவிக்கும் நிலை கல்நெஞ்சத்தையும் உருக்கும் தன்மையது. இந் நிலையைப் பெண்பறவை கண் ணுற்றது. அதன் சிறு உள்ளம் அத் துயரத்தை எவ்வாறு தாங்கும்? அது தன் துணைவனின் பிரிவினைத் தாங்க முடியாமல் கதறியது. துடித்துத் தவித்துப் புலம்பும் காட்சியை முனிவர் கண்டார். துக்கத்தால் மனம் நிரம்பி அசைவற்று நின்றது, சோகம் அவரை ஆட்கொண்டு விட்டது. இந்நிலையில் அவரது ஆன்மா பளிச்சென்று தெரிந்தது. உடனே துன்ப வேகமெல்லாம் இன்பப் பெருக்காய் மாறிவிட்டது. அது கருன ரஸ்மாய்ப் பரிண மித்தது. இந்நிலையில் முனிவர் தம்மை மறந்து நின்றார். பிறகு விழித்துக்கொண்டபொழுது, மனத்துண்டான சோகம் ஒரு சுலோகமாக, அளவற்ற இன்பத்தின் மணம் கமழ, வெளிக்கிளம்பி வந்தது. அதுவே கவிதா தேவியின் அருணோதயம், சுலோகத்தின் பொருள் இது: "வேடனே, மிதுனங்களான கிரவுஞ்சப் பறவைகளுள் காம மோகங் கொண்ட ஆணினைக் கொன்றமையால் பல நாள் இவ் வுலகில் நீ நிலைத்திராய் என்பது. இங்கு அடித்துக் கொல்லப்பெற்ற ஆண் பறவை ஆலம்பன வியாவம்; பெண் பறவையின் கதறுகை உத்திபன வி.பாவம்; சோகம் ஸ்தாயி பாவம்; உணரப்படும் சுவை கருணம் ஆகும். முனிவர் துக்ககரமான நிகழ்ச்சியை ஏற்றிருப்பாராயின், அவரது வாயினின்று கவிதை வெளிவராது என்பது திண்ணம்.