பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் பாட்டுத்திறன் என்ற வடமொழி அப்பைய தீட்சிதரின் சித்திர மீமாம் சைக் கூற்றும் இதற்கு அரணாக அமைகின்றது. இலக்கி யத்திலும் இதுவே முதல் ரஸ்மாகச் குறிப்பிடப் பெற் றுள்ளது. இலக்கியங்களையும் இதுவே அதிகமாக ஆட் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே இது ரஸங்களின் மன்னன்' என்றும் வழங்கப்பெறுகின்றது என்று வாதிடுவர். இன்னும் சிலர் மிக நுணுக்கமாய் ஆய்ந்தே சிருங்காரம் ஒன்றுதான் ரஸம் என்றும், மற்றவை அதன் வேற்றுருவங்களே என்றும், ஊன்றிக்கவனித்தால் அதுவே எல்லா ரளத்திலும் அடிப்படையாய்க் கிடப்பதை எவரும் எளிதாக உணரலாம் என்றும் கூறுவ:t. சிருங்கார ஸ்ர்ஸ் ஸ்வம் என்ற நூலின் ஆசிரியர் இப்படியே ஆய்ந்து வெளி யிட்டுள்ளார். பிறிதொரு சாரார் அற்புத ரஸ்த்திற்கு முதலிடம் தந்து அதிலிருந்துதான் ஏனையவை தோன்று கின்றன என்று பகர்வர். இங்ங்னம் அறிஞர்கள் ரஸம் ஒன்றுதான், பல அன்று என்று நம்ப வைக்க அரும்பாடு பட்டுள்ளதை அறிகின்றோம். இதில் உண்மை இல்லாமல் இல்லை. பலவகையான நீர்களில் தோன்றும் பகலவனின் பிம்பம்போல் பலவிதமான நிலைகளில் தோன்றும் ஆன்ம ஒளியாகிய ரஸத்திற்கும் வேற்றுமை இல்லை. உணர்ச்சிப் பெருக்கால் மனம் பூரித்திருக்கும்பொழுது அதில் தோன்றும் ஒளிக்கு வேற்றுமை இல்லை. அதுபவ நிலையை வைத்துப் பார்த்தால் ரஸ்த்திற்கும் வேற்றுமை இல்லாமை புலனாகும், ஒற்றுமையில் வேற்றுமை : சுவைகளுக்குக் காரணமாக இருக்கும் உணர்ச்சிகள் ஒன்பதாக வகுக்கப்பெற்றுள்ளதை மேலே கூறினோம் அல்லவா? ஓர் உணர்ச்சியில் பிற உணர்ச்சிகள் கலக்காமல் இருப்பது அரிது; பிற உணர்ச்சி களின் கூறுகள் அதில் இருக்கத்தான் செய்கின்றன. பூமியை எடுத்துக்கொண்டால் அதில் நீர், காற்று, நெருப்பு.