பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 கண்ணன் பாட்டுத்திறன் ஆகவே, இலக்கியத்தில் காணப்பெறும் எல்லாவித உணர்ச்சிகளும் படிப்போருக்கு இன்பம் அளிப்பதால் அவை யாவும் சுவைகள் என்று வழங்கப்பெற்றன என்றும், உலகியல் நிகழ்ச்சிகளின் உணர்ச்சிகள் அங்ங்ணம் இன்பம் அளிப்பதில்லையாதலால், அவை சுவைகள்--ரவிலங்கள்" ஆல்ல என்றும் ஈண்டு நாம் அறிதல் வேண்டும். கவை பற்றி நாம் பெற்ற இந்த அறிவின் அடிப்படையில் பாரதியார் குறிப்பிடும் ரஸங்களைப்பற்றி அறிய முற்பட வேண்டும்.