பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் தந்தை 6 i என்.அப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய் பொன்.அப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாங் ப் தன்னொப்பார் இல்அப்பன்' என்றும் கூறுவதைக் காணலாம். இதிகாசக் கண்ணன் அச்சில்தான் இக் கண்ணனும் வார்க்கப் பெறுகின்றான். இயற்கைக் கோள்களை நோக்கிசெயற்கைக் கோள்கள் ஏவப்பெற்று ஆண்டகோள ஆராய்ச்சி நடைபெறுவது இக்காலம். அண்மையில் அம்புலியை நோக்கி ஆளுள்ள ஆமெரிக்க விண்கலங்கள் ஏவப்பெற்று ஆய்வுகள் நடைபெற்றன. செவ்வாய், வியாழன், வெள்ளிக் கோள்களின் ஆய்வுகள் நடைபெறு கின்றன. இத்தகைய ஆய்வுகள் எல்லாம் பிற்காலத்தில் நடைபெறலாம் என்ற சாத்தியக்கூறுகளை யெல்லாம் பாரதியார் கனவுகண்டார் என்று நினைக்கத் தோன்று கின்றது. பூமிக் கெனைய னுப்பி னான்;--அந்தப் புதமண்ட லத்திலென் தம்பிக ளுண்டு; நேமித்த நெறிப்படி யே-இந்த நெடுவெளி யெங்கனும் நித்தம் உருண்டே போமித் தரைகளி லெல்லாம்-மனம் போலவிருந் தாளுபவர் எங்க ளினத்தார் சாமி இவற்றினுக் கெல்லாம்-எங்கள் தந்தையவன் சரிதங்கள் சிறிதுரைப்பேன். இந்த விண்வெளியில் நேமித்த நெறிப்படியே பல்லாயிரக் கணக்கான ஆண்டங்கள் நாடோறும் உருண்டோடு 4. மேலது 6.3; 9