பக்கம்:கண்ணீர் வியர்வை இரத்தம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேர்தல் நேரத்தில் நடந்துவிட்ட சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகள்! கழகத்தினுடைய தேர்தல்கள் படிப்படியாக நடைபெற்றபோது ஆங்காங்கு நடைபெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்கள் என்னுடைய மனத்தை, பொதுச்செயலாளருடைய மனத்தை, பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர் மற்றும் கழகத்திலுள்ள முன்னணியினர் அனைவரின் மனதை எந்த அளவுக்கு துன்புறுத்தி இருக்கிறது என்பதை நாம் ஒருவருக்கொருவர் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. ஆனாலும் கூட இந்த நிகழ்வுகள் மாற்றாரால் பெரிதுபடுத்தப்பட்டன. நம்மீது தொடர்ந்து எரிச்சலைக் கக்கிக் கொண்டிருக்கிற பத்திரிகைக் காரர்களால் பெரிது படுத்தப்பட்டன. அவைகள் பெரிது படுத்தப்பட்டன என்று சொல்கிற காரணத்தால் நான் அவைகளை பெரிதாகக் கருதவில்லை என்று தயவுசெய்து யாரும் கருதக்கூடாது. தஞ்சைத் தரணியில் பட்டுக்கோட்டையில் ஒரு பகுத்தறிவாளர் குடும்பமே பாழாகிவிட்டது. ஆனால் அதற்கு இந்தத் தேர்தல்தான் காரணமா என்றால் இல்லை. அதற்கு வேறு ஒரு காரணம் உண்டு. பல ஆண்டு காலமாகவே நம்முடைய இயக்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கும், இயக்கத்திற்கு புதிதாக வந்த மற்றொரு குடும்பத்திற்கும் இருந்த மனத்தாங்கல், கசப்பு, அது காழ்ப்பாக உருவாகி இறுதியாக இப்படிப்பட்ட ஒரு நிலைமைக்கு நாமெல்லாம் ஆளாகக்கூடிய சூழ்நிலை உருவாக்கியிருக்கிறது. லையை 5