ஆஸ்பத்திரிக்குரிய வாடையையும் நெடியையும் அனுபவித்து நடந்தான். அப்போது அவன் பார்வையில் காட்சியொன்று ஏடுவிரிந்தது. தான் ஈன்ற குட்டிகளைப் பாசம் பொங்கப் பார்த்து அவற்றை ஒவ்வொன்றாகப் பாசத் தோடு நக்கிக் கொண்டிருந்தது தாய்நாய் ஒன்று. இக்காட்சியை இமை வலிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அப்போது அவன் மனம் 'தாய் நாய் இருக்கிறது! ஆனால் தந்தை நாய் எங்கே?' என்று ஒரு கேள்வியை வீசியது: அவன் சுற்றிச் சூழ நோக்கினான். தாய் மட்டும்தான் தட்டுப்பட்டது!.. அவன் தடுமாறிக்கொண்டே நடையைத் தொடர்ந்தான். - ஊர்வசியின் நினைவுடன். அவன் மனமும் தொடர்ந்தது. - விதிவசத்தால் தன் வயிற்றில் கரு வளரும் நிலை ஏற்பட்டால், அந்த ஒரு முடிவுக்குக் குறுக்கே தான் என்றென்றும் நிற்கக் கூடாது என்று 'தனக்கு ஆணை இட்டிருந்த ஊர்வசியின் கடிதத்தின் இதயம் இப்போதும் அவனைத் தொட்டது. உணர்வு கலங்க, உள்ளம் கலங்க அவன் ஒரு வினாடி அப்படியே சிலையாக நின்றான். மீண்டும் ஊர்வசியைச் சூழ்ந்தது அவன் மனம், ஊர்வசியை பலவந்தமாகக் கெடுத்த அந்தப் பாவி யாராக இருக்கும்?... என்னிடம் மட்டுமல்லாமல், அவள் தாயிடமும் அவள் அந்தப் பாவியின் பெயரை ஏன் சொல்ல மறுத்துவிட்டாள்? இதில் சஸ்பென்ஸ் என்ன இருக்க முடியும்? பாவி, அவன். அந்தத் துரோகியை மட்டும் நான் அறிய முடிந்தால், அவனை ஊர்வசிக்கு முந்திக்கொண்டு பழிவாங்கிவிடுவேனே!... தன் ஆத்திரம் முழுவதையும் சுழலாக்கித் தன் நெஞ்சக் கடலிலே மறைத்து வைத்திருக்கிறாள் ஊர்வசி! அவள் மனம் எனக்குப் புரிகிறது. அவள் வேதனையை
பக்கம்:கதாநாயகி.pdf/102
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை