பக்கம்:கதாநாயகி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 99


"நம் இதயங்கள் வாழத் தொடங்கிவிட்டன. நாம் வாழத் தொடங்குவதற்காகத்தான் ஆவணியை எதிர்ப்பார்க்கிறேன். நானும் சாதாரணமாகத்தான் சொன்னேன்." நேற்றிரவு அவர்கள் இருவரும் கண்ணுறங்கிய அந்தப் புனிதப் பொழுது, அவர்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் நிழலாடிக் காட்டியதோ? "போய் வரட்டுமா?" "போய் வாருங்கள்" "நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. நீ என் அறைப் பக்கம் வாயேன், பேசிக்கொண்டிருப்போம்!" "உத்திரவு, டியர்!" உதட்டுப் புன்னகையைக் கண்கள் ஏந்தின. 'பர்மா ஸ்லிப்பர்கள் மறையத் தொடங்கிப் பத்து நிமிஷங்கள் ஆகியிருக்கும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/109&oldid=1284051" இலிருந்து மீள்விக்கப்பட்டது