பக்கம்:கதாநாயகி.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவைஎஸ்.ஆறுமுகம் ❖ 117



“சத்தியமாகவா?”

“சத்தியமாகத்தான், அம்பலத்தரசன்!”

அம்பலத்தரசன் உணர்ச்சி வசப்பட்டு எழுந்து, பூமிநாதனை ஆரத் தழுவிக்கொண்டான். அவன் விழிகள் பனி பெய்தன.

“நீங்களும் இம்மாதிரியான கடமையைச் செய்துகாட்டப் பின் வாங்க மாட்டீங்கண்ணுதான் நான் நம்புகிறேன்!” அம்பலத்தரசனை நோக்கிச் சொன்னான் பூமிநாதன்.

“ஆவணி பிறக்கட்டும். உங்களுக்கு என் சித்தாந்தம் புரியும்!... நான் செயல்முறையிலே செய்துகாட்டத்தான் போகிறேன்! எழுதுபவன், நடிகனாக இருக்கக் கூடாது! நான் அந்தரங்க கத்தியோடுதான் எழுதினேன், பலாத்காரமாகக் கற்பழிக்கப்பட்ட நல்ல பெண்களுக்கும் புது வாழ்வு கொடுக்கப்படவேண்டுமென்று! ஆகவே, இப்போது என் எழுத்தையே மனோதர்மமாகக் கொண்டு உதாரணமாக்கிக் காட்டத் தயாராகவும் இருந்திட்டுவருகிறேன்! அதற்குகந்த வாய்ப்பும் எனக்குத் தெய்வாதீனமாய்க் கை கூடியிருக்குது! இதோ பாருங்க, இந்தப் பூப் பொட்டலத்தை! இது என் காதலிக்கு! என் அனுதாபத்துக்குரிய அந்த அபலைக்குத்தான் இந்தப் பொட்டலம்!” முத்துக்கள் அம்பலத்தரசனின் அழகிய விழிகளைத் துறந்தன.

ரோஜாமடல்கள் தெரிந்தன.

“நீங்க ஒரு அதிசய புருஷர், மிஸ்டர் அம்பலத்தரசன்!”

அம்பலத்தரசைக் கையெடுத்துக் கும்பிட்டான் பூமிநாதன்.

“கும்பிடாதீங்க. அவ்வளவு பெருமைக்குரியவனல்ல நான். நான் மனிதன். மனிதனாகவே வாழ விரும்புகிற ஒரு மனிதன் நான். அவ்வளவுதான்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/127&oldid=1330455" இலிருந்து மீள்விக்கப்பட்டது