பக்கம்:கதாநாயகி.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56*கதாநாயகி


விட்டுப் பறந்துவிட்டான். என் நகங்களாலும் பற்களாலும் கூட என்னைக் காப்பாற்ற இயலாமல் போயிற்று. அந்தப்பாவியை அந்த மிருகத்தை அந்த துரோகியைப் பழிவாங்கியே தீருவேன்! அந்த கடமைக்காகவே, நான் உயிரோடு இருக்கவேண்டும்!

அந்தப் பாவியைத் தாங்களும் அறிவீர்கள்.

ஆனால், அவன் பெயரை நானாகச் சொல்லும் காலம் வரை, நீங்களாக என்னை அவன் பெயரைச் சொல்லும்படி தூண்டக்கூடாது.

ஓர் ஆணையும் உங்கள் முன்னே வைக்கிறேன்.

என்னைப் பற்றி நம்பிக்கை குறைந்தாலோ, அல்லது என்னைப் பற்றிய நல்லெண்ணம் மாறினாலோ, எப்போது வேண்டுமானாலும் தாங்கள் என்னை நிராகரித்துவிடலாம். இதற்கு நான் மனப்பூர்வமாக இணங்குகிறேன்.

இப்போது பத்திரிகைக்கதைகள் சில என் நினைவிற்கு வருகின்றன.

வழுக்கி விழுந்த ஒர் அபலையின் வயிற்றுப் பிள்ளைக்குத் தந்தையாக இருக்கமட்டுமே ஒப்புகிறான் ஒர் அறிவாளி. ஆனால் அந்தத் துரதிருஷ்டக்காரிக்கு நிரந்தரக் கணவனாக மட்டும் இருக்க ஒப்பவில்லை அவன்! இப்படி ஒரு கதை.

இன்னொன்று:

கெடுக்கப்படுகிறவள் ஒர் அழகுக்குமரி. அவள் தலையில் ஒரு குடம் தண்ணீரைக் கொட்டி அவளது கறை படிந்த கற்பைத் தூய்மைப்படுத்துகிறாளாம் அவள் தாய். வினோதமமான பண்பாடாகத் தோன்றவில்லையா இது? இந்தக் கதையைப் படித்துவிட்டு அந்தத் தாய்க்காகக் கண்ணீர் சொரித்தேன் நான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/66&oldid=1319044" இலிருந்து மீள்விக்கப்பட்டது