பக்கம்:கதாநாயகி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 77


உங்க பணத்தைக் கண்டுதான் பயப்படுது! இதுதான் யதார்த்தம்!..." அம்பலத்தரசன் தொடர்ந்தான். சோளம் பொரிந்தது, பேச்சில். "அப்படின்னா, கற்பழிக்கப்பட்ட அதாவது, அவள் இஷ்டம் இல்லாமலே கெடுக்கப்பட்ட பெண் ஒருத்தி உங்களைச் சரண் அடைஞ்சா, நீங்க அந்த அபலைக்கு வாழ்வு தருவீங்க... இல்லையா?" என்று சவால் விட்டான் கருணாநிதி, "தாராளமாக அந்த அபலைக்கு நான் வாழ்வு தருவேன். அந்த மனம் எனக்கு இருக்குது!... அதனால்தான் இப்படிச் சூளுரைக்கிறேன்!. ஆனா, உங்கமாதிரி மட்டும் நான் ஒரு போதும் துரோகியாக ஆகிவிடமாட்டேன்!..." முகத்திரையில் செம்மை படரத் தலைபட்டது. "என்ன சொல்றிங்க நீங்க, அம்பலத்தரசன்?" பயம் கப்பக்கேட்டான் மேல்மட்டத்துப் பிள்ளையாண்டான். சில்க் ஸ்லாக் கில் வேர்வை கொட்டியது. "அதிர்ச்சி அடையாதீங்க. உங்க பாவத்தை நானும் அறிவேன்! உங்க தொழிற்சாலையிலே அலுவலுக்கு வந்த ஒரு ஏழைக்கன்னியை நீங்க வெறிகொண்டு கற்பழிச்சீங்க. இந்தச் சங்கதி அந்தப் பெண்ணோட அப்பனுக்கு எட்டுச்சு. கெடுத்த நீங்களே அந்தப் பெண்ணை ஏற்றுக்கிடும்படி எவ்வளவோ கதறினான் அந்த ஏழை. பணத்தை வீசி எறிஞ்சீங்க. அவன் அதை உங்க மூஞ்சியிலே வீசி எறிஞ்சிட்டுப் போயிட்டான். அன்றைக்கே அப்பனும் மகளும் கடலிலே விழுந்திட்டாங்க!... தர்மம் அந்த ஏழைகளைப் பொறுத்தவரை செத்திட்டது. ஆனா, நீங்க ஜாம்ஜாம்னு இருக்கீங்க உசிரோடு!... உங்க பங்களா ஊர்வாயை அடைச்சிட்டதாய் நீங்க நினைச்சிருக்கீங்க!.., ஒண்னு சொல்றேன். கருணாநிதி... தர்மம் சாகாவரம் பெற்றது. அந்த ஏழைப் பெண்ணோட தகப்பனாகவோ, அல்லது அவள் சகோதரனாகவோ நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/87&oldid=1284032" இலிருந்து மீள்விக்கப்பட்டது