பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மந்திரிகள் பண்டிதர்களை அழைத்து, அவர்களுடன், "இந்தக் கிளிக்கு எப்படிப் பாடம் சொல்லிக் கொடுக்கலாம்" என்று யோசனை செய்தார்கள். கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி தங்கக் கூண்டு ஒன்றைச் செய்து, அதற்குள் கிளியைப் போட்டு அடைத்தார்கள். பெரிய மண்டபம் ஒன்றில் அதைக் கொண்டு போய் வைத்தார்கள். சுற்றிலும் பண்டிதர்கள் உட்கார்ந்து கொண்டார்கள்.

கிளிக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக ஆட்களை வைத்துப் புத்தகங்களை எழுதி எழுதிக்

39