பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பிராய்ச்சித்தம்

ஏதாவது சொல்லலாம். என்னவோ வேதனை என்கிறாய். அப்படிப்பட்ட வேதனை என்ன? அதைத் தீர்க்கும் சக்தி அந்தப் பெண்ணுக்குத்தான் இருக்கிறதா ? அப்படிப்பட்ட அந்த மோகினி யாரப்பா ?’’

அதெல்லாம் வாயினாலே சொல்லி முடிகிற விஷயம். அல்ல. மனசும் மனசும் அறிந்து கொள்ளும் விஷயம்.'

அவன் சொல்வது ஒன்றும் தாய்க்கு விளங்கவில்லை. ஆனால் அவன் பே சும் தோரணையிலிருந்து அவனுக்கு ஒரு பெரிய மனவேதனை இருப்பதாகத் தெரிந்தது. அவள்: தர்ய்க்குரிய அன்பினால் இரங்கினாள் ; விஷயம் புரியாமல் அழுதாள். ---

'அம்மா, கல்யாணம் என்பது இங்கே விஷயம் அல்ல, மனிதன் தான் செய்யும் பாவங்களுக்கு இந்த ஜன்மத்திலே பிராயச்சித்தம் பண்ணிக்கொள்ள வே ண் டு ம். எங்கும் நிறைந்திருக்கும் கடவுளுடைய முன்னிலையில் ஒரு தப்புச் செய்தால் அதற்காக வருந்திப் பரிகாரம் செய்து மன்ம் உருகினால் அவனுக்கு அ த் .ெ த ய் வ த் தி ன் அருள் சித்திக்கும்.’’ - -

" உன் வேதாந்தம் மோதுமடா! இது கல்யாணப்: பேச்சாக இல்லையே !’ என்று அவள் அழுதாள். -

அவன் மனம் கல்லாகச் சமைந்திருந்தது. ஆனால், அந்தக் கடினம் ஒருபுறத்தில்தான் மற்றொரு புறத்தில் அது மிகவும் அதிகமாக இளகி யிருந்தது; சென்றதற்கு இரங்கி நைந்து கரைந்து உருகியது. - , ,

" எப்படியாவது தொலைந்து போங்கள். என் கண்ல் முன் இனிமேல் அவன் இருக்க வேண்டாம் எங்கேயாவது போய் எப்படியாவது படித்துக் கொள்ளட்டும். ஒரு தம்பிடி இனிமேல் நான் தரமாட்டேன்' என்று சொல்லி விட்டார் தகப்பனார். அவர் போலீஸ் வீரர் அல்லவா ? -

4.

ரங்கநாத முதலியாருக்கு அந்தக் கடிதத்தைக் கண்டி போது ஒன்றும் புரியவில்லை. "யார் இவ்வளவு அக்க்றிை.