பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 குமரகுருபரன் உலகத்திலுள்ள மக்களுக்கு எல்லாம் சாதுக்களாக இருக் கிறவர்கள் குருவாக அமைவார்கள். அவர்களுக்குத் துறவிகள் ஆசிரியர்களாக இருப்பார்கள். துறவிகளுடைய பரம்பரையைப் பார்த்தால் அவர்களுடைய மூல ஆசிரியர்கள் முனிபுங்கவர்களாக இருப்பார்கள். அந்த முனியுங்கவர்களுள் சிறந்தவர்கள் சனகர் முதலிய நான்கு பேர்கள். அந்த நால்வருக்கும் குருவாக இருந்தவன் தென்முகக் கடவுளாகிய தட்சிணாமூர்த்தி. குரு என்று சொன்னால் அந்தச் சொல் சிறப்பாகத் தட்சிணாமூர்த்தியைக் குறிக்கும். எல்லோருக்கும் ஆதி குருவாக இருக்கின்ற தட்சிணாமூர்த்தி யும் ஒரு சமயம் மாணாக்கனாக இருந்தான். குருவாக இருக்கிற வன் மாணாக்கனாகவும் இருப்பான். அவன், நன்கு கல்வி பயின்றவனாகையால் தன் குருவை நோக்க மாணாக்கனாகவும், பிறருக்குக் கல்வி பயிற்றுவிப்பவன் ஆகையால் மாணாக்கனை நோக்கக் குருவாகவும் இருப்பது இயல்பு. இந்த வகையில் பார்த் தால் உலகிலுள்ள அத்தனை குரு மூர்த்திகளும் மாணாக்கர் களாகவும் இருப்பார்கள். இந்த நிலை தட்சிணா மூர்த்திக்கும் உண்டு. தென்முகக் கடவுள் ஆகிய சிவ பெருமானுக்கும் ஒரு குரு அமைந்தான். அந்தக் குருவே முருகப் பெருமான். குருவுக் குள் சிறந்த குரு ஆகையால் அவனைக் குமர குருபரன் என்றும், சிவகுரு என்றும், சிவசாமி என்றும், தகப்பன் சாமி என்றும் பெரி யவர்கள் கூறுவார்கள். பிறரிடம் இருந்து உபதேசம் பெறாமல் குருவாகவே நிற்கிறவன் முருகப் பெருமான். இப்படியே குரு சிஷ்ய பரம்பரையில் தனக்குப் பின்னாலே மாணாக்கன் இல்லா மல் ஒருவன் இருந்தால் அவன் மாணாக்கனாக மட்டும் நிற்கும் நிலை உடையவன். குருவாகவே நிற்கும் பெருமை உடைய பெருமான் ஞான பண்டித சாமியாகிய முருகன். முருகனுடைய பெருமைகள் பல. வள்ளி மணவாளன் என்று அவனைச் சிந்திக்கும்போது பக்தர்களுடைய மனம் உருகுகிறது. சூரனைச் சங்காரம் செய்தவன் என்று நினைக்கும்போது அடியார் களுக்குத் துணிவு பிறக்கிறது. சின்னஞ்சிறு குழந்தை என்று சொல்லும்போது யாரும் பயம் இல்லமல் அணுகுகின்ற அன்பு பிறக்கிறது. இப்படி அவன் பல வகையில் திருவிளையாடலைச் 248