பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 கொண்டு இவர்களால் இன்ன காரியத்தைச் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் மக்களுக்கு வரும். அந்தத் தொண்டர்களை அழைத்துத் தமக்கு உதவி செய்யும் படி வேண்டிக் கொள்வார்கள் அந்த அடையாளச் சின்னங்கள், மற்றவர்கள் அவர்களை அணுகி உதவி கேட்பதற்குத் துணையாக இருப்பது போல, எம்பெருமான் போர்த்துக் கொண்ட யானைத் தோல் ஆணவம் நீங்குவதற்கு வேண்டிய திருவருளை இவன் வழங்குவான் என்பதற்கு அடை யாளமாக இருக்கிறது. புராந்தகன் அடுத்தபடியாகப் புராந்தகன் என்று சொல்கிறார். புரத்திற்கு அந்தகன் சிவபெருமான்; மூன்று புரங்களை அழித்தவன். மூன்று புரங்கள் என்பவை மூன்று மலங்களுக்கு அடையாளம். மூன்று மலங்களால் ஆன கோட்டைக்குள் அகப்பட்டு, கட்டுப்பட்டு, ஆன்மா வீடு அடையாமல் இருக்கிறது. வீட்டைப் பெறவேண்டு மானால் மூன்று மலங்களையும் போக்க வேண்டும். இறைவன் மூன்று மலங்களையும் தன்னுடைய திருவருளால் அழித்து உயிர்களைத் தன்னுடன் இணைத்துக் கொள்வான். இந்த அரிய கருத்தைத்தான் அவன் மூன்று புரங்களை அழித்த கதை தெரிவிக் கிறது. மூன்று புரங்கள், மூன்று மலங்கள். அவற்றில் இருந்த அசுரர்கள் ஆன்மாக்கள். இறைவன் மூன்று புரங்களை மாத்திரம் அழித்தானே அன்றி, புரங்களில் இருந்த அசுரர்களை அழிக்க வில்லை. புரங்களைச் சுட்டு எரித்த பிறகு அந்த மூவரையும் தன்னுடைய அணுக்கத் தொண்டர்களாக ஆக்கிக் கொண்டான். ஒருவனை மத்தளம் வாசிக்கும் தொண்டனாகவும், மற்ற இரு வரையும் வாயில் காவலராகவும் அமைத்துக் கொண்டான் என்று புராணம் சொல்கிறது. ஆன்மாக்களுக்குரிய மூன்று மலங்களை யும் அழித்து ஒழித்து அவ்வான்மாக்களை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் பேரருளாளன் என்பதைத் திரிபுராந்தகனாக இருந்து எம்பெருமான் காட்டுகிறான். 'அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்; முப்புர மாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யாரறி வாரே' என்று புரம் எரித்த செயலுக்கு உள்ளுறை கூறுவர் திருமூலர். 252