பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகை விளையாட்டு 1 பிரபஞ்சம் என்பது ஒரு விளையாட்டு மேடை. இந்த மேடையில் விளையாடும் உயிர்க் கூட்டங்கள் குழந்தைகள். குழந்தைகளுக்குத் தலைவனாக இருக்கும் குமர குருபரனும் குழந்தையே. குழந்தைகளுக்கு விளையாடுவது இயல்பு. நாம் செய்கின்ற விளையாட்டு ஒருவகை. முருகன் செய்கின்ற விளையாட்டு வேறுவகை. விளையாட்டு வகை உடம்பென்னும் ஊனக் குடிசையில் புகுந்து நாம் செய்யும் செயல்கள் மேன்மேலும் உடம்பை அடையும்படி செய்கின்றன. மனத்தினாலே நினைப்பது, வாயினாலே பேசுவது, உடம்பினால் செயல் செய்வது ஆகிய எல்லாச் செயல்களும் மீண்டும் பிறவி விளைவதற்கு விதைகள் ஆக இருக்கின்றன. இப்படி இருக்கும் இந்த விளையாட்டு ஒரு விதம். ஆண்டவனோ மாயா விளையாட்டு விளையாடும் குழந்தை களுக்கு நடுவில் ஞான விளையாட்டு விளையாடுகிறான். அவன் ஞான விளையாடல் புரிவதால் ஊன விளையாடல் புரியும் சிலராவது அவன் திருவருளைப் பெறுகிறார்கள். சிலர், 'பெற வில்லையே!” என்று நினைக்கிறார்கள். இன்னும் சிலர், 'பெற லாம்' என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள். சிறந்த சான் றோர்கள் ஊன நாடகம் ஆடும் உலகத்தவருக்கு ஞான நாடகம் ஆடுகின்ற நாயகன் இருக்கிறான் என்ற நினைப்பை ஊட்டு கிறார்கள். இவ்வாறு உலகமாகிய விளையாட்டு மேடையில் ஞான விளையாடல், ஊன விளையாடல் ஆகிய இரண்டும் நிகழ்கின்றன.