பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகை விளையாட்டு ஊனம் என்றால் உடம்பு. இந்த உடம்பு நாம் செய்த புண்ணிய பாவ வினைகளால் வந்தது. மாயா விளையாடல் காரணமாக வினைகள் உயிர்களைச் சாருகின்றன. உலகத்தில் நடைபெறும் ஊன விளையாட்டு அத்தனைக்கும் மாயை காரணம். அது உலகத்திலுள்ள மக்களை எல்லாம் இயக்குகிறது. இறைவன் திருவருள் அன்பர்களை இயக்குகிறது. அவன் திருவருளால் உண்டாகும் விளையாட்டு ஞானத் திருவிளையாட்டு. மாயை யினுடைய ஆற்றலால் விளைவது மாயை விளையாட்டு அல்லது ஊன் விளையாட்டு. மாயையும் மனமும் மாயை அகண்டமாக இருப்பது. வினைக்குக் காரணம் செயல்; செயல்களுக்கு மூலம் மனம். மனத்தின் செயலே பிறவியாக விளைகிறது. அந்த மனத்தைக் கண்டமான மாயை என்று சொல்ல லாம். மாயை என்ற தாய்க்கு மனம் என்பது ஒரு குழந்தை. கந்தபுராணம், மாயைக்குச் சூரன் பிள்ளையாகப் பிறந்தான் என்று கூறுகிறது. இந்த மனமும் சூரனைப் போன்றதே. பிழம்பாக இருப்பது, தனியாக இருப்பது என்று இரண்டு வகை உண்டு. பிழம்பைச் சமஷ்டி என்றும், தனியை வியஷடி என்றும் சொல்வார்கள். தோப்பு என்பது சமஷ்டி, மரம் என்பது வியஷ்டி, தோப்பு என்பது முழுமையும் குறிப்பது; தொகுதியைக் குறிப்பது. மரம் ஒன்றைக் குறிப்பது. தொகுதியாக உள்ள பிழம்பில் மரம் ஒர் உறுப்பு. மக்கள் என்பது சமஷ்டி; மனிதன் என்பது வியஷ்டி. அவ்வாறு மாயை என்பது பிழம்பு அல்லது சமஷ்டி; மனம் தனி அல்லது வியஷடி. மாயையின் குஞ்சு மனம். மனம் எங்கே இருக்கிறதோ அங்கே மாயையின் விலாசம் இருக்கும். மனம் மனமாக இருக்கும் வரையில் மாயையின் விலாசம் அங்கே இருக்கும். 'மனம் மனமாக இல்லாமல் வேறு எப்படி இருக்கும்?" என்ற கேள்வி இங்கே எழலாம். சில பசுமாடுகள் உண்டு. 'அந்த வீட்டுக்குப் போனால் ஜாக்கிரதையாகப் போகவேண்டும். அங்கே இருப்பது பசு அல்ல; புலி, பக்கத்தில் போகாதீர்கள்' என்று சொல்வார்கள். உண்மையில் அங்கே இருப்பது பசுமாடு 257