பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 முடியாது. எவ்வளவோ பேருக்குக் காயத்தை உண்டாக்கும். எத்தனையோ பேர்களிடத்தில் அடி வாங்கும். ஆகவே, விளையாட்டாக இருந்தாலும் வினையாக முடியவை சில. குழந்தை செய்வதால் விளையாட்டு என்று சொல்ல வேண்டுமே யொழிய, அந்தச் செயலால் நிகழும் துன்பங்களை எண்ணினால் அது விளையாட்டு ஆகாது. குழந்தை குரங்காதி விட்டால் விளையாட்டு வினையாகிவிடும். மாயை விளையாட்டு பிரபஞ்ச நாடகம் ஆடும் உயிர்களுக்கு மனம் பொல்லாத குழந்தையாக இருக்கிறது. ஐந்து இந்திரியங்கள் என்னும் கத்தி களை வீசி விளையாடுகிற பொல்லாத குழந்தை அது. அது விளையாடுகிற விளையாட்டு வினை விளையாட்டு அல்லது மாயை விளையாட்டு. தீய விளையாட்டை விளையாடும் குழந்தை களைப் பெற்றவர்களுக்கு உலகத்தார் அபவாதம் உண்டாகிறது; அரசாங்கத்தில் தண்டனை கிடைக்கிறது. இந்த மாயை விளை யாட்டு விளையாடும் மனத்தைப் பெற்ற உயிர்களுக்கு மேன் மேலும் துன்பங்கள் விளைகின்றன; பிறவியாகிய தண்டனை கிடைக்கிறது. அதனால் அந்தக் குழந்தையே வேண்டாமென்று சொல்வதுபோலப் பெரியவர்கள் மனமே வேண்டாமென்று சொன்னார்கள்; மனம் இல்லாத நிலை வேண்டுமென்றும், மனம் செத்துப் போக வேண்டுமென்றும் வேண்டினார்கள். மனம் மாறுபட்ட விளையாட்டைச் செய்வதற்குக் காரணம் அதனிடத்தில் ஏதோ நோய் இருக்கிறது. அந்த நோய்க்கு அஞ் ஞானம் அல்லது அறியாமை என்று பெயர். பித்தம் ஏறி இருப்ப தனால் குழந்தை பொல்லாங்கான செயல்களைச் செய்கிறது என்று சொல்வது வழக்கம். அப்படியே இந்த மனமும் அஞ் ஞானம் என்ற நோயைப் பெற்று மாயை விளையாட்டை விளை யாடுகிறது. அதற்கு ஏதேனும் பரிகாரம் செய்தால் நல்ல விளையாட்டை விளையாடும். அஞ்ஞானம் என்ற நோய்க்குப் பரிகாரம் ஞானம் அல்லது நல்ல அறிவு. ஆண்டவனைப் பற்றி அறிந்து அவன் திருவருள் பெறும் ஆர்வத்தால் நல்ல முறையில் முயற்சி செய்து பேரின்பத்தை அடைய வேண்டுமென்ற அறிவை 26C