பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகை விளையாட்டு வந்தால் இன்னல் அடைகிறோம். உலக வாழ்க்கையில் இந்த மூன்று வகையாலும் துக்கம் உண்டாகிறது. ஆனால் இந்த மூன்றையும் போலவே வேறுவகையான மூன்றை நினைத்துப் பார்த்தால் அவை பற்றிய துக்கந்தான் பெரிதாக இருக்கவேண்டும். எல்லா உறவினர்களையும்விடப் பெரிய உறவினன் ஆகிய பரமேசுவரனை நாம் பிரிந்திருக்கிறோம்; அது எவ்வளவு பெரிய துயரத்தை உண்டாக்க வேண்டும்? நமக்கே உரிமையான முத்தி என்னும் செல்வம் நமக்குக் கிடைக்காமல் இருக்கிறது; அதனால் எத்தனை துக்கம் உண்டாக வேண்டும்? எல்லா நோய்களையும் விடக் கடுமையானது உடம்பு வரும் நோய் ஆகிய பிறவி. பல காலமாக அந்தப் பிணி நம்மைப் பற்றிக் கொண்டிருக்கிறது; அந்தப் பிணியை நினைந்து பார்த்தால் எல்லாவற்றையும்விடப் பெரிய துயரம் உண்டாகும். பிறவியாகிய பெரும் பிணியைப் பெற்றும் அதைப் பற்றி நாம் நினைப்பது இல்லை. இறைவன் ஆகிய பெரிய உறவைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இழந்து நின்றும் துன்புறுவது இல்லை. முத்திச் செல்வத்தைப் பெறாமல் உண்மையான வறுமையை அடைந்தும் நாம் புலம்புவது இல்லை. இதற்குக் காரணம் நாம் மாயா விநோதத்தில் ஈடுபட்டிருப் பதுதான். நூறு ரூபாய் போய்விட்டதே! என்று துக்கப்படத் தெரிகிறது. நமக்குரிய வீடு போய்விட்டதே! என்று துன்புறத் தெரிகிறது. ஒருபூதரும் அறியாத் தனி வீட்டில் இருக்கவில்லையே!” என்று துன்புற வகை இல்லை. நம்மை வளர்த்து எடுத்துப் பாலூட்டிய தாய் மறைந்து போனால் புலம்புகிறோம்; வாடு கிறோம். ஆனால் இந்த உயிருக்குத் தாயாகிய ஆண்டவனைச் சிறிதேனும் நினைப்பது இல்லை; அவனைப் பிரிந்து வாழ் கிறோமே என்று வருத்தம் அடைவது இல்லை. இப்படியெல்லாம் உண்மையான துக்கம் இல்லாமல் பொய் யான துக்கங்களை ஏறட்டுக் கொண்டு வாழ்வதற்குக் காரணம் இந்த மனமே, துக்கப்படுவதும் இதுதான். இந்த மனோ துக்கத் தில் நம் வாழ்நாளே கரைந்து போகிறது. இதுவே மாயா விநோதத்தின் பயன். மாயா விநோத மனோதுக்கத்தில் ஈடுபட்டு நம்முடைய வாழ்க்கை வீணாகிறது. மாயையோடு சேர்ந்த இருளில் உழல்கின்ற நமக்கு ஆண்டவன் அருள் கிட்டுவது இல்லை. இந்த 267