பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் நம்முடைய வீட்டில் தித்திப்பான பண்டத்தைப் பலகாரத்திற் காகப் பண்ணியிருக்கிறார்கள். இன்றைக்கு முருகனுடைய விரதம்; சஷ்டி. எல்லோரும் பலகாரம் பண்ண வேண்டும்' என்று சொல்லி ஏதோ இனிப்பான பண்டத்தைச் செய்திருக்கிறார் கள். முருகனுடைய அடியார்கள் வீட்டில் அன்று பலர் இனித்த பலகாரத்தைச் செய்கிறார்கள். நூறு வீட்டில் நூறு விதமாகச் செய்கிறார்கள். ஒரு வீட்டில் செய்த பலகாரம் மற்றொருவர் வீட்டில் இல்லை. ஒரு வீட்டில் ஜிலேபி, மற்றொருவர் வீட்டில் ஹல்வா, பின் ஒரு வீட்டில் லட்டு என்று பலவகையாகச் செய் தார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் ஒவ்வொரு வரும் வெவ்வேறு உருவத்தில் இனிப்புப் பண்டத்தை உண் டாலும் அவர்கள் அறிந்த சுவை இனிமை என்பதுதான். அது போல, இறைவனுடைய திருவருளைப் பெறும் வழி வெவ்வே றாக இருந்தாலும், இறைவனைச் சந்தித்த முறை வெவ்வேறாக இருந்தாலும், அவர்கள் திருவருளை உணர்ந்து பெற்ற இன்பம் ஒன்றுதான். அவரவர்களுடைய உபாசனை முறைக்கும், குருவின் உபதேச வகைக்கும், சாதனத்தின் தன்மைக்கும் ஏற்ப அவர் களுக்கு அநுபவம் வருகிறது; வழி அமைகிறது. வெவ்வேறு உருவங்களை வழிபட்டாலும் முடிந்த முடிவான அநுபவம் எல்லோருக்கும் ஒன்றுதான். எத்தகைய உணவை உண்டாலும் பசி தீருகிற அநுபவம் எப்படி ஒன்றோ, அதுபோலவே எந்த வகையில் உபாசனை செய்தாலும் தியானம் பண்ணினாலும் இறைவன் திருவருளால் பெறுகின்ற இன்பம் ஒன்றுதான். இத்தகைய இன்பத்தைத்தான் பேரின்பம் என்று பொதுவாக யாவரும் குறித்தார்கள். அந்தப் பேரின்பம் நமக்குக் கிடைக்க வேண்டுமானால் அதைப் பெற்றவர்கள் சொன்ன செய்திகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். உலகத்திலுள்ள ஆணும் பெண்ணும் பல உருவமாகப் பல வகை வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொருத்தியை மனைவியாகப் பெற்று வாழ்ந்தாலும், எல்லோ ரும் பெறுகின்ற சிற்றின்பம் பொதுவகையில் ஒன்றுதான். அவர் களுடைய மனைவிகள் வெவ்வேறு உருவமும் வெவ்வேறு எழிலும் உடையவர்கள். ஆனால் ஆண் பெண் உறவில் உண்டா கின்ற இன்பத்தில் வேறுபாடு இல்லை; ஒன்றே. வெவ்வேறு 233