பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 இயல்புள்ள மக்களின் மன்த்தை வண்டாக வைத்து, இறைவனுடைய திருவடியைத் தியானம் செய்து இன்பத்தைப் பெறவேண்டு மென்று சொல்லும் உபதேசமே மணிவாசகர் பாட்டு. 2 அருணகிரி நாதரும் தம்முடைய புத்தியாகிய வண்டு இறைவனுடைய பாதாம்புயத்தில் சென்று சேர வேண்டுமென்று நினைக்கிறார். புத்தியை வாங்கி நின் பாதாம்புயத்தில் புகட்டி, அன்பாய் முத்தியை வாங்க அறிகின்றிலேன். வேற்றுமையில் ஒற்றுமை நம்முடைய மனத்தில் இறைவனுடைய பாதாம்புயத்தை வைத்துத் தியானம் பண்ணவேண்டும் என்பதையே அப்படிச் சொன்னார். எம்பெருமான் பல பல திருவுருவங்களிலே மக்களுக்கு அருள் செய்கிறான். அந்தத் திருவுருவங்களின் ஒற்றுமை வேற்று மையையும், உயர்வு தாழ்வையும் அறியப் புகுந்து இது உயர்ந் தது, இது தாழ்ந்தது என்று முடிவுகட்டும் அறிவு நமக்கு இல்லை. தோற்றத்தில் பல பல வேற்றுமைகள் இருந்தாலும் அத்தனை வேற்றுமைகளுக்குமிடையே ஓர் ஒற்றுமை இருக்கிறது. திருவடி களைப் பற்றும் இயல்பு வந்தால் அந்த ஒற்றுமை தெளிவாகும். பல உருவம் நம் நாட்டில் உள்ளவர்கள் ஓர் உருவத்தை மட்டும் கொண் டாடுவது இல்லை. பல பல மூர்த்திகளை வழிபடுகிறார்கள். அந்தக் கடவுளுக்குப் பலவிதமான உருவங்கள் அமைத்திருக் கிறார்கள். எதைப் பார்த்தாலும் வேறுபாடு. முருகன் என்று சொன்னால் அவனுக்குப் பல பல உருவங்கள். மொட்டை அடித்த தலையும், இரண்டு கையும், ஒரு முகமும், கையில் தண்டமும் கொண்ட தண்டபாணியைப் பழனியில் கொண்டாடு கிறார்கள். இன்னும் சில இடங்களில் வள்ளி தேவசேனை சமேதனாக மயில் வாகனத்தில் அமர்ந்து அருள் வழங்கும் உருவத்தில் வழிபடுகிறார்கள். பின்னும் சில இடங்களில் 316