பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும் மலரும் சென்று அவன் கருத்தைக் கேட்டபோது, 'கண்ணா, உன் னுடைய கருத்து எனக்குத் தெரியும். துரியோதனனுக்கு வெற்றி வருவதோ, பாண்டவர்களுக்கு வெற்றி வருவதோ உன்னுடைய நோக்கம் அன்று. பல காலத்திற்கு முன்னாலேயே நிலமகள் உன்னிடம் வந்து அழுதாள். சுமை தாங்கவில்லை என்று அவள் முறையிட்டதைக் கேட்டு நீ பூபாரம் தீர்க்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறாய். அந்த உண்மை எனக்குத் தெரியும்' என்றான். 'நீபா ரதவமரில் யாவரையும் நீறாக்கிப் பூபாரம் தீர்க்கப் புரிந்தாய் புயல்வண்ணா!!” இதனைக் கண்ணன் கேட்டவுடன், 'பாரதப்போர் வராமல் ஏதாவது வழி இருந்தால் சொல்' என்று கேட்டான். அதற்குச் சகாதேவன் சொன்னான். “பாராளக் கன்னன்இகற் பார்த்தனைமுன் கொன்றணங்கின் காரார் குழல்களைந்து காலில் தளையூட்டி நேராகக் கைப்பிடித்து நின்னையும்யான் கட்டுவனேல் வாராமற் காக்கலாம் மாபா ரதமென்றான்." 'துரியோதனனோ, தருமனோ அரசாள்வது என்று இல்லாமல் கர்ணன் அரசாள வேண்டும். அதற்கு முன்பு, அவன் அருச்சுனனைக் கொல்லவேண்டும். திரெளபதியின் கூந்தலை முடிப்பதா, விரிப்பதா என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் அவளது குழலைக் களையவேண்டும். பின்பு நான் உன்னைக் கட்டவேண்டும். இவை நடைபெற்றால் பாரதப் போர் வராமல் காக்கலாம்' என்றான். இப்படி வேறு யாராவது சொல்லி இருந்தால், நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுகிறானே என்று தோன்றும். தமையன், மனைவி என்ற பற்றுக்களை விட்ட ஞானி சகாதேவன் ஒரு வனால்தான் இப்படிப் பேசமுடியும். அவனுடைய உயர்ந்த நிலையைக் கண்ணபிரான் தெரிந்து கொண்டுதானே அவனைத் தனியே அழைத்துக் கேட்டான்? - சகாதேவன் சொன்னதைக் கேட்ட கண்ணன் சிரித்துக் கொண் டான்; "நீ சொன்னது எல்லாம் சரி. ஒருகால் முன் சொன்ன எல்லாம் நடந்தாலும் நடக்கலாம். என்னை நீ எப்படிக் கட்டுவாய்?" என்று கேட்டான். சகாதேவன் உடனே விடை சொன்னான். 323