பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெருமை கிறானே அவன் மிகவும் இழிந்தவன். அவனுடைய குணம் இழிந்த குணம். 'ஈயென இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று. இப்படி இழிவையும் அதனினும் இழிவையும் சொன்ன புலவர், உயர்வையும் அதனினும் உயர்வையும் சொல்ல வரு கிறார். பிறருடைய குறைபாட்டைக் குறிப்பினால் தெரிந்து கொண்டு தமக்கு இறைவன் அருளிய செல்வம் பிறருடைய வறுமையை நீக்குவதற்கு என்று அறிந்து, தாமே வலிந்து சென்று, 'இந்தா, இதைப் பெற்றுக்கொள்' என்று கொடுப்பது மிக உயர்ந்த இயல்பு. 'கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று.” இனி இந்த உயர்ந்த இயல்புக்கு மேல் மற்றோர் இயல்பைப் புலவர் பேசுகின்றார். கொள் என ஒருவன் கொடுக்கும் போது, நான் இதனைப் பெற்றுக் கொள்ள மாட்டேன்' என்று மறுக் கிறானே, அவன் கொடுக்கும் உயர்ந்த குணம் படைத்தவனை விடச் சிறந்தவன். - 'கொள்ளனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன்எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று' என்கிறார் அந்தப் புலவர். கொள் என்று கொடுப்பவனுக்கு முன்னாலே நின்று, கொள்ளமாட்டேன் என்று சொல்வதற்கு மனத்திண்மை வேண்டும். நம்பிக்கை வேண்டும். இறைவன் திருவருள் நமக்கும் ஒரு வழி காட்டும் என்ற உறுதி வேண்டும். ‘'வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை யாண்டும் அஃதொப்பது இல்' என்று வள்ளுவர் சொல்கிறார். கொடுப்பதை வேண்டாம் என்று சொல்கிறவன் ஒரு வகையில் செல்வனாக விளங்குகிறான். நம்மிடம் பணம் இருந்தாலேயே மேலும் ஒருவன் கொடுத்தால் பணத்தின்மேல் பணத்தைச் சேர்த்துக் கொள்வதற்காக வாங்கு கிறோம். அப்படி இருக்க, நம்முடைய வறுமை தெரிந்து ஒருவன் கொடுக்கிறான் என்றால் அதனை மறுப்பது சாமானிய மனம் படைத்தவனாலே இயலாது. அதற்கு ஒரு தனி மனத் துணிவு 35i