பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 திட்டத்தோடு நிற்பானா? நிதானம் இழந்துவிடுகிற வரைக்கும் குடிப்பான். லாகிரி வஸ்துக்களை உபயோகிக்கிறவர்களில் சிலர் பெருமை யாகப் பேசிக்கொள்வார்கள். "கள் சாப்பிட்டாலும் அதை ஒரு நிதானத்தில் வைத்திருக்கிறேன்' என்று சொல்வார்கள். சிலரைப் பற்றி, 'அவன் குடித்திருந்தாலும் நிதானம் இழப்பதில்லை. மரியாதை தவறிப் பேசுவதில்லை" என்று சொல்வதை நாம் கேட்கிறோம். அப்படிச் சொல்வதைப்போல அருணகிரியார் இந்தப் பாட்டில் பேசுகிறார். மறவா நிலை 8 ഓഗുഖങ്ങ நோக்கி, "நான் மாதரார் காமக் கலவிக் கள்ளை மொண்டு உண்டு மயங்கினாலும் உன் வேலாயுதத்தை மறக்க மாட்டேன்' என்று சொல்கிறார். கண்டுஉண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை மொண்டுஉண்டு அயர்கினும் வேல்மறவேன். பெண்களைப்பற்றிச் சொல்லும்போது அவர்களுடைய சொல்லின் தன்மையை முதலில் பேசுகிறார். அவர்கள் கற் கண்டை உண்டு அதைச் சொல்லாகவே வெளியிடுவாரைப் போல பேசுகிறார்கள். கண்டுஉண்ட சொல்லியர். அந்தச் சொல்லைக் கேட்டுக் காம உணர்ச்சி உண்டாகிறது. அதனாலே மயங்கி அவர்களை அணைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் மிக மென்மையான உருவத்தை உடையவர்கள். மெல்லியர். அவர்களிடத்தில் விளைகின்ற கலவிக் கள்ளை மொண்டு உண்டு மயங்கி நிற்கிறார்கள் காமிகள். கள்ளைத் தன்னுடைய விருப்பப் படியே எந்த வரையறையும் இல்லாமல் மொண்டு உண்டால் அயர்வுதான் வரும். வரையறையாக உண்டால் அயர்வு ஒரளவு நிற்கும். இங்கே தம்முடைய மனப்படியே கலவிக் கள்ளை மொண்டு உண்டு அயர்ந்தாலும், எல்லாவற்றையும் மறந்தாலும், ஒன்றை மாத்திரம் மறக்கவில்லை என்று அருணகிரியார் சொல் கிறார். இந்த நிலை சாமானிய மக்களுக்கு வருவது இல்லை. 86