பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 போனால், அவன் தன்னையும்விடப் பணக்காரனோடு உறவாடிக் கொண்டிருந்தான். இவரைப் பார்க்கக்கூடச் சம்மதிக்காது அப்புறம் வரும்படியாக விரட்டி விட்டான். 'இவனைப் போய்ப் பார்ப்பானேன்? இவனைவிடப் பணக்காரனாகிய வேறொரு பணக்காரனோடு அல்லவா இவன் உறவாடுகிறான்? அந்தப் பணக்காரனோடு நாமே சென்று உறவாடலாம்' என்று அங்கே போனால், அவன் தன்னையும்விடப் பணக்காரனாகிய வேறொரு செல்வனோடு உறவாடிக் கொண்டிருந்தான். அவன் தன் வீட்டுக் குள்ளே நுழையவே இவரை அநுமதிக்கவில்லை. இவர்களை எல்லாம் பணக்காரர்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருக் கிறோம். இவர்கள் பிச்சைக்காரர்கள் அல்லவா? இத்தனை பணம் படைத்திருந்தும் இவர்கள் தங்களையும்விடப் பணக்காரருடைய தயவை நாடியல்லவா பிச்சை கேட்டுக் கொண்டு நிற்கிறார்கள், இவர்கள் எல்லோரையும் ஒரு தட்டில் வைத்தாலும் எதிர்த் தட்டில் இருக்கிற ஆண்டவனாகிய பணக்காரனோடு ஒப்பிட முடியாதே அவனிடம் போய், "செல்வாய செல்வம் தருவாய் மதுரைப் பரமேட்டி' என்று கேட்டுக் கொள்ளலாம் என்று போய்விட்டாராம். தொடர்புள்ள செல்வன் அமெரிக்காவில் ஒரு கோடீசுவரன் இருக்கிறான் என்று சொன்னால் அவனால் நமக்கு இந்த ஊரில் பயன் என்ன? நமக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு? செல்வம் அவனிடம் இருந்தால் போதாதே. அவனுக்கும் நமக்கும் தொடர்பு அல்லவா வேண்டும்? தொடர்பு இருந்தால் போதாது. அந்தத் தொடர்பைப் பயன்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்பு வேண்டும். மற்ற மக்க ளோடு தொடர்பு கொள்ள வாய்ப்பு உண்டோ, வழி உண்டோ இல்லையோ ஆராய்ச்சி செய்ய வேண்டும். தகப்பனாரோடு நமக்குத் தொடர்பு இருப்பது நியாயமானால் இந்தத் தொடர்பு ஆண்டவனோடும் இருப்பது பலகாலும் நியாயமானதுதான். இந்தப் பிறவிக்குத் தாயாகத் தந்தையாக வருபவர்கள் இவர்கள். ஆனால் எல்லாப் பிறவியிலும் ஆன்மாவுக்குத் தாய் தந்தையாக வருபவன் ஆண்டவன். அவனோடு நமக்கு மிக மிக அதிகமான தொடர்பு உண்டு. யார் யாரையோ தம்முடைய உறவினராக 244