பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை வித்தார மூரலை வேட்ட நெஞ்சைப் பார்த்து இந்தப் பாட்டில், 'தெள்ளிய ஏனலில் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும் வள்ளியை வேட்டவன் தாள் வேட்டிலை" என்று கூறுகிறார். ★ இந்த ஆறு பாடல்களில் நான்கு பாடல்கள் (1, 2, 3, 5) முருகனைப் படர்க்கையில் வைத்துப் பரவியவை. ஒன்று (6) நெஞ்சை நோக்கிக் கூறியது. ஒன்று முருகனை முன்னிலையாக வைத்து விண்ணப்பித்துக் கொண்டது (4.) முருகனுடைய திருவிளையாடல்கள் பலவற்றைச் சொல்லிப் பாராட்டுகிறார் அருணகிரிநாதர். முருகன் திருவவதாரம் செய்த வுடன் பலவகையான திருவிளையாடல்களைச் செய்தான்; திண்ணிய கிரிகள் சிந்தும்படி விளையாடினான் (5); தன்னை மதியாது சென்ற பிரமனைக் காலில் தளையிட்டுச் சிறைப் படுத்தினான் (1); கிரெளஞ்ச மலையின் மேல் வேலைவிட்டுப் பொடியாக்கினான் (1): கடல் சுவற வேல் வாங்கினான் (1), சூரன் மாமரமாக நிற்க, அவன்மேல் வேல் எறிந்து கொன்றான் (3); படைத்தொகுதியுடன் வந்த சூரனை அழித்து அமரரைக் காப்பாற்றினான் (4); வள்ளிநாயகியை வேட்டுச் சென்று அவளைக் களவு கொண்டுவந்தான் (3). இந்த வரலாறுகளை இந்தப் பாடல்கள் நினைப்பூட்டுகின்றன. அவனுடைய வேலை நான்கு பாடல்களில் (1, 3, 4, 5) எடுத்துச் சொல்கிறார்; அது ஒப்பற்ற தனிவேல் (1); போர்வேல் (3), அவன் கொடியாக விளங்குகிறது சேவல் (3). அவனுடைய திருவடி தண்டையை அணிவது, தாமரை போல விளங்குவது; சுத்த ஞானமே வடிவானது (6). அவன் அழகிய திருவரையில் கிண்கிணியை அணிந்திருக்கிறான்; அது பதினாலுலகமும் கேட்கும்படி ஒலிக்கிறது (5). அவனுக்குரிய தலமாகிய திருச்செங்கோடு இரண்டு பாடல் களில் இடம்பெறுகிறது. அருணகிரி நாதருக்கு அத்தலத்தில் மிக்க ஈடுபாடு உண்டு. கந்தர் அலங்காரத்தில் பல இடங்களில் அந்தத் தலத்தைப் பாராட்டுகிறார். கந்தர் அநுபூதியில் வேறு எந்தத் தலத்தையும் பாடாமல் நாகாசலமாகிய திருச்செங்கோட்டை 129