பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல வேட்கை தாயும் குழந்தைகளும் கருணைமிக்க ஒரு தாய்க்குப் பல குழந்தைகள் இருந்தார் கள். அந்தக் குழந்தைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோயால் துன்புற்றது. சிறிய வியாதிகளும், பெரிய வியாதிகளும் அந்தக் குழந்தைகளுக்கு இருந்தன. சில குழந்தைகள் கண்வலியால் துன்புற்றன. வேறு சில பல்வலியால் துன்புற்றன. வயிற்று வலியால் அவதியுற்ற சில குழந்தைகள் உண்டு. வயிற்றில் கட்டி விழுந்து அதனால் துன்புற்ற குழந்தைகளே மிகுதி. ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியே மருந்து வாங்கிக் கொண்டு வந்து அந்தக் குழந்தைகளில் ஒவ்வொன்றுக்கும் கொடுத்து, அவற்றிற்கு வேண்டிய பரிகாரம் செய்து வந்தாள் தாய். - ஆனால் அவளுக்கு அடிக்கடி கட்டி வீழ்ந்த குழந்தைகளைப் பற்றியே நினைப்பே அதிகம். காரணம் : அந்த நோயினால் அவஸ்தைப்படுகிற குழந்தைகளே மிகுதியாக இருந்தன. ஆகை யால் மருத்துவரிடம் போகும்போதெல்லாம் அதிக நேரம் கட்டி விழுந்த குழந்தைகளைப் பற்றியே பேசிவந்தாள். அந்தக் குழந்தைகளுக்காகவே பல மருத்துவர்களைத் தேடிச் சென்றாள். ஆகவே அவளுக்குக் கட்டியைப் பற்றி எண்ணமும் அதற்குரிய மருந்து வாங்கும் நினைப்பும் அடிக்கடி எழும். பெரிய நோய் அருணகிரியார் அவளைப்போல இருக்கிறார். உலகில் மக்களிடம் பல வகையான குற்றங்கள் இருக்கின்றன. தீய குணங்கள் பல. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்று சொல்லும் ஆறு பகைவர்களும் மக்களுடைய உள்ளத்தில் இருந்து மன அமைதி இல்லாமல் செய்கிறார்கள். இந்த ஆறிலும் காமமாகிய ஆசை எல்லாவற்றிலும் மீதூர்ந்து